Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய்க்காக போராடுவோம்.. சினிமாவுக்கு நீதி வேண்டும் - ட்விட்டரில் பொங்கும் சித்தார்த்!
தலைவா படத்தை தமிழகத்தில் வெளியிட முடியாததால் கைபிசைந்து நிற்கிறது அந்தப் படக் குழு. தயாரிப்பாளர் நெஞ்சு வலி என மருத்துவமனைக்குப் போய்விட்டார். அம்மா, எப்படியாவது படத்தை வெளியிட உதவுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார் விஜய்.
இந்த பிரச்சினையில் தலையிட திரையுலகினர் மிகவும் தயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் தனுஷ் குரல் கொடுத்தனர்.
ஆனால் பிரகாஷ்ராஜ் பின்னர் அமைதியாக ஒதுங்கிக் கொண்டார். மக்கள் நலப் பணிகள் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கருத்து கூறி, பின்னர் அதை வாபஸ் பெற்றுக் கொண்டார் தனுஷ்.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ட்வீட்டில், 'பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு இப்போது மோசமான நாட்கள். இளையதளபதி விஜய் மற்றும் அவர் டீமை பலப்படுத்துவோம். சினிமாவுக்கு நீதி வேண்டும். போராடுவோம்,' என்று குறிப்பிட்டுள்ளார்.