TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
அவள் பறந்து போனாளே...: சொம்பு சொம்பாக கண்ணீர் விடும் சிம்பு
சென்னை: தங்கை இலக்கியா கணவர் வீட்டுக்கு சென்றதையடுத்து அந்த பிரிவை தாங்க முடியாமல் சிம்பு கண்ணீர் விடுகிறாராம்.
சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கும், சாப்ட்வேர் என்ஜினியர் அபிலாஷுக்கும் கடந்த 10ம் தேதி சென்னையில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அன்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி, கமல், விஜய் என்று ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட சிம்பு தற்போது கவலையில் உள்ளாராம்.
கணவர் வீடு
திருமணம் முடிந்த பிறகு இலக்கியா தனது கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இத்தனை நாட்களாக தன்னுடன் ஒரே வீட்டில் வளர்ந்த தங்கையின் பிரிவு அண்ணன் சிம்புவை வெகுவாக பாதித்துள்ளதாம்.
கண்ணீர்
தங்கை பிறந்த வீட்டை விட்டு சென்றதை நினைத்தால் சிம்புவால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லையாம். மனிதர் தங்கையை நினைத்து அழுதுவிட்டாராம்.
காதல் பிரிவை விட
தங்கை பிரிந்து சென்றது காதல் பிரிவை விட மிகவும் வேதனையாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார். இந்த பிரிவை தான் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறோமோ என்று வருந்துகிறாராம்.
ஹன்சிகா
சிம்புவின் காதலியான ஹன்சிகா காதலர் தினத்தை தனது தோழிகளோடு கொண்டாடியது காதலர்கள் பிரிந்து விட்டார்களோ என்ற பேச்சுக்கு இடம்கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.