Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நயன்தாரா.. செளகரியமும், அசெளகரியமும்: சொல்கிறார் சிம்பு
சென்னை: எனக்கு நயன்தாராவுடன் பணியாற்ற தற்போது சவுகரியமாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் யாருமே எதிர்பாரா வண்ணம் பாண்டிராஜ் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தில் நடிக்க நயன்தாரா முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டார்.
சிம்புவும், நயனும் பல ஆண்டுகள் கழித்து ஜோடி சேர்ந்துள்ளது அனைவரின் கவனத்தையும் பாண்டிராஜ் படம் பக்கம் திருப்பியுள்ளது.
சவுகரியம்
முன்னாள் காதலியான நயன்தாராவுடன் நடிப்பது குறித்து சிம்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், அவருடன் நடிப்பது தற்போது சவுகரியமாக உள்ளது என்றார்.
அசவுகரியம்
நான் நயன்தாராவை பார்த்து வசனம் பேசுகையில் மொத்த படக்குழுவும் எங்களையே பார்ப்பது தான் எனக்கு அசவுகரியமாக உள்ளது என்றார் சிம்பு.
இமய மலை
வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி தனது 30வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் சிம்பு இமய மலைக்கு சென்று வந்துள்ளார்.
தங்கை
சிம்புவிடம் இத்தனை நாட்களாக திருமணம் எப்பொழுது என்று கேட்டால் முதலில் தங்கைக்கு முடியட்டும் என்பார். இந்நிலையில் அவரது தங்கை இலக்கியாவுக்கு வரும் 10ம் தேதி திருமணம் நடக்கிறது.
திருமணம்
தங்கைக்கு தான் திருமணம் நடக்கப் போகிறதே நீங்கள் எப்பொழுது கல்யாண சாப்பாடு போடுவீர்கள் என்று கேட்டால் இந்த ஆண்டே நடக்கலாம் என்று பதில் அளித்தார் சிம்பு.