twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹைதராபாத் குண்டுவெடிப்பில் எனக்கொன்றும் ஆகல, பத்திரமா இருக்கேன்: சிம்பு

    By Siva
    |

    Simbu
    ஹைதராபாத்: ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தபோது அங்கிருந்த நடிகர் சிலம்பரசன் தான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஹைதராபாத்தில் நேற்று மாலை குண்டுவெடிப்பு நடந்ததில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் வாலு பட ஷூட்டிங்கில் இருந்தார் சிம்பு.

    குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    இந்த குண்டுவெடிப்பு ஒரு சாபம். நாம் இந்தியர்கள் அச்சமற்றவர்கள். எத்தனை எதிரிகள் சவால் விட்டாலும் நாம் தான் எப்பொழுதும் வெற்றி பெறுவோம். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.

    ஹைதராபாத்தில் தான் பத்திரமாக உள்ளதாகவும், கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Simbu was in Hyderabad at the time of the blasts. He tweeted that he is safe and there is nothing to worry besides expressing his pain at the incident in the social networking site.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X