Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நாதஸ் இப்போ திருந்திட்டாப்ள.. - ஷூட்டிங் நேரத்துக்கு முன்பே ரெடியாகி நிற்கும் சிம்பு!
Recommended Video
சென்னை : நடிகர் சிம்புவை பற்றி நல்ல விஷயங்களைச் சொல்பவர்களைத் தாண்டி குறை கூறுபவர்கள் தான் அதிகம்.
படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார், இயக்குனர் சொல்வதைச் செய்ய மாட்டார் என நிறைய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்துவரும் சிம்பு படப்பிடிப்பு நேரத்துக்கு முன்பே முழுவதுமாக ரெடியாகி நடிக்கத் தயாராகி விடுகிறாராம்.
சிம்பு என்றாலே வம்பு
திரையுலகில் சிம்பு என்றாலே வம்புதான் என்பார்கள். அவரை வைத்து ஒரு படம் இயக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் என்கிற பேச்சு தான் அதிகம் கேட்கமுடியும். 'AAA' படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் சிம்புவைப் பற்றி அத்தனை குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள்.
சிம்புதான் காரணம்
சிம்பு நடித்த, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் தோற்றுப்போனதற்கு காரணமே சிம்பு தான் என்றார்கள். அவர் ஒருநாள்கூட சரியாக படப்பிடிப்புக்கு வந்ததில்லை என்று குற்றம் சாட்டி, அவரிடத்தில் ரூ.18 கோடி நஷ்ட ஈடு கேட்டார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அதையடுத்து சிம்புவிற்கு ரெட் கார்டு போடும் நிலை உருவானது.
மணிரத்னம் படத்தில்
இந்த நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கி வரும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
மாற்றிக்கொண்ட சிம்பு
இவ்வளவு நாளாக படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் மதியத்திற்கு மேல்தான் ஸ்பாட்டுக்கு வருவார் என்று கூறப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் 9 மணி என்றால் அதற்கு முன்பே சென்று மேக்கப் போட்டு தயாராகி விடுகிறாராம் சிம்பு. இதனால் படக்குழுவினரே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.