Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிம்பு ரசிகர்களே.. உங்களுக்கு டபுள் ட்ரீட்!
கௌதம் மேனன் படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது
Recommended Video
சென்னை: சிம்பு அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிம்பு சுந்தர் சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.
சிம்பு-சுந்தர் சி கூட்டணி, சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி என அடுத்தடுத்து ஹாட் அப்டேட் கிடைத்த ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக கௌதம் மேனன்-சிம்பு கூட்டணி அறிவிப்பு வெளியானது.
தற்போது அந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றிக்குப் பிறகு சிம்பு, கௌதம் மேனன், ஏஆர்.ரஹ்மான் இணையும் படம் இதுவாகும்.
சிம்பு இரட்டை வேடத்தில் நடித்த மன்மதன் மற்றும் சிலம்பாட்டம் திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெற்றன. தற்போது மீண்டும் இரட்டை வேடத்தில் கலக்க உள்ளார்.
பொழுதுபோக்கு கமர்ஷியல் படமாக இப்படம் தயாராக உள்ளது. படத்தின் கதை தொடர்பான விஷயங்கள் வெளியிடப்படவில்லை. நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவ நட்சத்திரம் பட வேலைகள் கொஞ்சம் இருப்பதால் அவை முடிந்தவுடன் கௌதம் படப்பிடிப்பை ஆரம்பிப்பார் என சொல்லப்படுகிறது.