Don't Miss!
- Sports KKR vs RR : ஐபிஎல் தொடரிலேயே 2வது மோசமான பந்துவீச்சு.. அஸ்வின் கேரியரையே காலி செய்த சுனில் நரைன்
- News திருவள்ளூரில் வெற்றி வாகை சூடும் காங்கிரஸ்? தேமுதிகவுக்கு ஷாக்.. பாஜக நிலைமை? தந்தி டிவி சர்வே
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஏஏஏ படத்தால் வந்த வினை: நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு?
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரனால் நடிப்புக்கு முழுக்கு போடுகிறாராம் சிம்பு.
அடல்ட் ஒன்லி படம் எடுக்கத் தான் நான் லாயக்கு என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிம்புவை வைத்து நான் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறும் என்றார் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஆனால் படத்தை பார்த்தவர்கள் பிட்டு பட இயக்குனர் ஆதிக் என்று முத்திரை குத்திவிட்டனர்.
சிம்பு
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து சிம்புவின் பெயர் ஏகத்திற்கும் டேமேஜாகிக் கிடக்கிறது. படத்தை பார்த்த சிம்பு ரசிகர்களே அவரை திட்டியுள்ளனர்.
போச்சா
நடிப்பில் ஆர்வம் இல்லை ஆனால் என் ரசிகர்களுக்காக நான் படங்களில் நடிக்கிறேன் என்று சிம்பு அண்மையில் தெரிவித்தார். ஏஏஏ படத்தை பார்த்து அவரின் ரசிகர்களே கோபம் அடைந்ததை அடுத்து சிம்பு தனது முடிவை மாற்றியுள்ளாராம்.
போதும்
நடிப்புக்கு முழுக்கு போடும் முடிவுக்கு வந்துள்ளாராம் சிம்பு. அதற்கு காரணம் ஆதிக் ரவிச்சந்திரனாம். நடித்தது போதும் இனி இயக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.
இயக்கம்
புதுமுகங்களை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு. அந்த படத்தை அவரின் தந்தை டி. ராஜேந்தர் தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.