ட்விட்டரிலிருந்து விலகினார் சிம்பு!
ட்விட்டரிலிருந்து விலகிக் கொள்வதாக நடிகர் சிம்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வாலு திரைப்படம் பெரும் இழுத்தடிப்புக்குப் பிறகு வெளியாகி, சிம்புவை மீண்டும் மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்தது.

இனி ஆண்டுக்கு இரண்டு படங்களாவது வெளியிடுவது உறுதி என சிம்புவும் கற்பூரம் அடிக்காத குறையாக மேடைகளில் கூறி வருகிறார். அதற்கேற்ப இப்போது இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வருகிறாராம்.
தமிழ் நடிகர்களில் ட்விட்டரில் பிஸியாக இருந்தவர்களில் சிம்புவும் ஒருவர். எஸ் டி ஆர் என்ற பெயரில் அவர் ட்வீட்கள் போட்டு வந்தார்.
ஆனால் இனிமேல் ட்விட்டரில் தொடரப் போவதில்லை என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:
'இதுவரை என் ரசிகர்களும், என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி. இன்று முதல் எனது ட்விட்டர் எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வாகிக்கப்படும் . தேவைப்பட்டால் மட்டுமே நான் என் கருத்தை பதிப்பேன். ஒரு நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான படம் கொடுக்க வேண்டும் என்பது தான். அவர்களுடனான என்னுடைய தொடர்ந்து வெற்றிப் படங்கள் தருவதில்தானே தவிர, இதைப் போன்ற சமூக வலைத் தளங்களில் இல்லை என்பதையும் நான் உணர்ந்துக் கொண்டேன். என்னுடைய இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











