Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாத்ரூமில் இருந்து கொண்டு அடம் பிடித்த சிம்புவா இது?: வியக்கும் கோலிவுட்
சென்னை: ஜோதிகாவின் காற்றின் மொழி பட டப்பிங் வேலையை ஒரே நாளில் முடித்து அசத்தியுள்ளார் சிம்பு.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின்மொழி. படப்பிடிப்பை படுவேகமாக நடத்தி முடித்துவிட்டனர். இந்த படத்தில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் வருகிறார்.
சிம்புவுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது. இதை அவரே பல மேடைகளில் தெரிவித்துள்ளார்.
சிம்பு
ஹலோ எஃப்.எம். ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்துள்ளார் ஜோதிகா. சிம்பு திரையுலக பிரபலமாகவே நடித்துள்ளார். ஹலோ எஃப்.எம். நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் அவர் வரும் காட்சி. இந்த காட்சியில் நடிக்குமாறு ராதாமோகன் சிம்புவிடம் கேட்க, அவரும் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
காற்றின் மொழி
காற்றின் மொழி படத்திற்கான டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்துள்ளார் சிம்பு. ஜோதிகா மீது தனக்கு தனி மரியாதை உண்டு என்று சிம்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், காற்றின் மொழி குறித்து ராதாமோகன் என்னிடம் கூறியதுமே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்தேன். ஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
அக்டோபர்
காற்றின் மொழி படத்தில் சிம்பு நடித்தது படத்திற்கு பெரிய பலம் என்று நினைக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். சிம்பு மனநிறைவோடு நடித்துக் கொடுத்து டப்பிங் பேசியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். காற்றின் மொழி படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடம்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு சிம்பு ரொம்பவே மாறிவிட்டார். அந்த படத்திற்கு அவர் தனது வீட்டு கழிவறையில் இருந்து டப்பிங் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் தான் அவர் காற்றின் மொழி படத்திற்கு ஒரே நாளில் டப்பிங் பேசியது கோலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது. மனிதர் இந்த அளவுக்கு மாறிவிட்டாரே என்ற வியப்பு தான்.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!