Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காவி வேட்டி, கழுத்தில் ருத்ராட்சம், தெருவோரத்தில் ஓய்வு..! - இதுதான் இன்றைய சிம்பு!
சென்னை: ஆன்மீகத்துக்கு மாறிவிட்டேன் என்று நடிகர் சிம்பு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
அறிவித்ததோடு நில்லாமல், ஆன்மீக வேடத்துக்கும் மாறிவிட்டார். தலையில் காவித்துண்டு கட்டிக் கொண்டு, சாதாரண உடையில் இமயமலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்து அனுபவம் பெற்றுள்ளார்.
காவி வேட்டி கட்டி, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து சாலையோரங்களில் அமர்ந்து, மக்களோடு ஓய்வெடுத்துள்ளார். புனிதமான சில மலை குகைகளில் அமர்ந்து தியானம் செய்தாராம் (பாபா குகைக்குப் போய் வந்தீங்களா?).
ஆன்மீகத்துக்கு மாறியது குறித்து அவர் கூறுகையில், "கடவுள் எனக்கு தேவையான புகழைக் கொடுத்துள்ளார். தேவையான அளவு பணமும் இருக்கிறது. ரசிகர்கள் ஆதரவு உள்ளது.
இப்போது வேறு ஒரு உலகில் இருப்பதை உணர முடிகிறது. இனி பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல. விரைவில் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுப்பேன்," என்றார்.
சினிமாவை விட ஆன்மீகம் பற்றிப் பேசுவதுதான் சிம்புவுக்கு இப்போது ரொம்பப் பிடித்திருக்கிறது.
இந்த சீஸன் எப்போ முடிவுக்கு வரப் போகுதோ...