twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவி வேட்டி, கழுத்தில் ருத்ராட்சம், தெருவோரத்தில் ஓய்வு..! - இதுதான் இன்றைய சிம்பு!

    By Shankar
    |

    சென்னை: ஆன்மீகத்துக்கு மாறிவிட்டேன் என்று நடிகர் சிம்பு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

    அறிவித்ததோடு நில்லாமல், ஆன்மீக வேடத்துக்கும் மாறிவிட்டார். தலையில் காவித்துண்டு கட்டிக் கொண்டு, சாதாரண உடையில் இமயமலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்து அனுபவம் பெற்றுள்ளார்.

    காவி வேட்டி கட்டி, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து சாலையோரங்களில் அமர்ந்து, மக்களோடு ஓய்வெடுத்துள்ளார். புனிதமான சில மலை குகைகளில் அமர்ந்து தியானம் செய்தாராம் (பாபா குகைக்குப் போய் வந்தீங்களா?).

    Simbu

    ஆன்மீகத்துக்கு மாறியது குறித்து அவர் கூறுகையில், "கடவுள் எனக்கு தேவையான புகழைக் கொடுத்துள்ளார். தேவையான அளவு பணமும் இருக்கிறது. ரசிகர்கள் ஆதரவு உள்ளது.

    இப்போது வேறு ஒரு உலகில் இருப்பதை உணர முடிகிறது. இனி பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல. விரைவில் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுப்பேன்," என்றார்.

    சினிமாவை விட ஆன்மீகம் பற்றிப் பேசுவதுதான் சிம்புவுக்கு இப்போது ரொம்பப் பிடித்திருக்கிறது.

    இந்த சீஸன் எப்போ முடிவுக்கு வரப் போகுதோ...

    English summary
    Now Simbu's look and approach are completely changed and the young actor speaks more about spirituality than his movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X