Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காவி வேட்டி, கழுத்தில் ருத்ராட்சம், தெருவோரத்தில் ஓய்வு..! - இதுதான் இன்றைய சிம்பு!
சென்னை: ஆன்மீகத்துக்கு மாறிவிட்டேன் என்று நடிகர் சிம்பு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
அறிவித்ததோடு நில்லாமல், ஆன்மீக வேடத்துக்கும் மாறிவிட்டார். தலையில் காவித்துண்டு கட்டிக் கொண்டு, சாதாரண உடையில் இமயமலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்து அனுபவம் பெற்றுள்ளார்.
காவி வேட்டி கட்டி, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து சாலையோரங்களில் அமர்ந்து, மக்களோடு ஓய்வெடுத்துள்ளார். புனிதமான சில மலை குகைகளில் அமர்ந்து தியானம் செய்தாராம் (பாபா குகைக்குப் போய் வந்தீங்களா?).
ஆன்மீகத்துக்கு மாறியது குறித்து அவர் கூறுகையில், "கடவுள் எனக்கு தேவையான புகழைக் கொடுத்துள்ளார். தேவையான அளவு பணமும் இருக்கிறது. ரசிகர்கள் ஆதரவு உள்ளது.
இப்போது வேறு ஒரு உலகில் இருப்பதை உணர முடிகிறது. இனி பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல. விரைவில் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுப்பேன்," என்றார்.
சினிமாவை விட ஆன்மீகம் பற்றிப் பேசுவதுதான் சிம்புவுக்கு இப்போது ரொம்பப் பிடித்திருக்கிறது.
இந்த சீஸன் எப்போ முடிவுக்கு வரப் போகுதோ...