எனக்கு பயமாக இருக்கிறது: ட்விட்டரில் இருந்து வெளியேறிய சிம்பு
சென்னை: சிம்பு இன்று ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.
நடிகர் சிம்பு ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வந்தார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார், தனது கருத்துகளையும் ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கம்,
எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தை தான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் நேர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது.
ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இது தான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











