twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் தமிழ் பையன், எனக்கும் தமிழுணர்வு உள்ளது: மாணவர்கள் உண்ணாவிரத பந்தலில் சிம்பு பேச்சு

    By Siva
    |

    சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை நடிகர் சிம்பு சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பேதகர் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு நேற்று நடிகர் சிலம்பரசன் வந்தார்.

    அவர் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    Silambarasan

    அப்போது சிம்பு பேசியதாவது,

    நானும் ஒரு தமிழ் பையன். எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது என்பதால் தான் இங்கு வந்துள்ளேன். பிறர் முன்பு பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக நான் இங்கு வரவில்லை. அந்த பெயரை நான் நன்றாகவே சம்பாதித்து வைத்துள்ளேன்.

    மாணவர்கள் என்றால் நன்றாக படம் பார்ப்போம், ஜாலியாக இருப்போம், நன்றாக சுற்றுவோம் என்ற கருத்து சமுதாயத்தில் உள்ளது. ஒரு முக்கியமான விஷயத்திற்கு மாணவர்களாலும் குரல் கொடுக்க முடியும் என்பதை தெரிவிக்கும் வகையில் நீங்கள் போராடி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எனவே, ஒரு தமிழனாக நானும் உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

    மனதை தளரவிட வேண்டாம். நிச்சயமாக நல்ல விஷயம் ஒன்று நடக்கும் என்று நினைக்கிறேன். சிறியதாக நடக்கிற ஒரு விஷயம் தான் நாளைக்கு பெரிதாக மாறும். என்றைக்குமே என் ஆதரவு உங்களுக்கு உண்டு. தைரியமாக இருங்கள் என்றார்.

    English summary
    Actor Silambarasan visited the fasting Ambedkar law college students and expressed his support to them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X