Don't Miss!
- News உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நான் தமிழ் பையன், எனக்கும் தமிழுணர்வு உள்ளது: மாணவர்கள் உண்ணாவிரத பந்தலில் சிம்பு பேச்சு
சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை நடிகர் சிம்பு சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பேதகர் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு நேற்று நடிகர் சிலம்பரசன் வந்தார்.
அவர் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது சிம்பு பேசியதாவது,
நானும் ஒரு தமிழ் பையன். எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது என்பதால் தான் இங்கு வந்துள்ளேன். பிறர் முன்பு பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக நான் இங்கு வரவில்லை. அந்த பெயரை நான் நன்றாகவே சம்பாதித்து வைத்துள்ளேன்.
மாணவர்கள் என்றால் நன்றாக படம் பார்ப்போம், ஜாலியாக இருப்போம், நன்றாக சுற்றுவோம் என்ற கருத்து சமுதாயத்தில் உள்ளது. ஒரு முக்கியமான விஷயத்திற்கு மாணவர்களாலும் குரல் கொடுக்க முடியும் என்பதை தெரிவிக்கும் வகையில் நீங்கள் போராடி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எனவே, ஒரு தமிழனாக நானும் உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன்.
மனதை தளரவிட வேண்டாம். நிச்சயமாக நல்ல விஷயம் ஒன்று நடக்கும் என்று நினைக்கிறேன். சிறியதாக நடக்கிற ஒரு விஷயம் தான் நாளைக்கு பெரிதாக மாறும். என்றைக்குமே என் ஆதரவு உங்களுக்கு உண்டு. தைரியமாக இருங்கள் என்றார்.