Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என் பெயரில் போலி ட்விட்டர் பக்கங்கள் - சிம்பு புகார்
சென்னை: தன் பெயரில் போலியாக ட்விட்டர் பக்கங்களை உருவாக்கி செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிம்பு, அதுகுறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட்களை சிலர் தொடங்கி, அதில் சம்பந்தப்ட்ட நடிகர் நடிகைகளே நேரடியாக ஈடுபடுவது போல காட்டிக் கொள்கின்றனர்.
ஏற்கெனவே திரிஷா, நயன்தாரா பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்கள் புகார் செய்த பிறகு அவை முடக்கப்ட்டன.
சமீபத்தில் காமெடி நடிகர்கள் பரோட்டா சூரி, வி.டி.வி கணேஷ் பெயரிலும் மோசடி நடந்தது. தற்போது சிம்பு பெயரில் நடக்கிறது.
இதுகுறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை:
ட்விட்டரில் ஐ அம் எஸ்டிஆர் என்ற பெயரில் என் அதிகாரபூர்வ கணக்கு உள்ளது. ஆனால் என் பெயரில் சில போலி ட்விட்டர் கணக்குகளும் இருக்கின்றன. ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் இந்த போலி கணக்கை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என்னைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் எனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் உடனுக்குடன் போட்டு வருகிறேன். என் பெயரில் உள்ள போலி பக்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.