twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிளாமர் தங்கச்சி சிம்புவின் முழு கஸ்டடியில் வந்துள்ள சரவணா படத்தில் சிம்புவின் தலையீட்டின் பேரில் கிளாமர் காட்சிகளைகூடுதலாக்கியுள்ளனராம். துரையின் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில், சிம்பு, ஜோதிகா இணையில் உருவாகியுள்ள சரவணா ரிலீஸுக்குத்தயாராகி விட்டது. சிம்பு வைத்த எக்குத்தப்பான செலவுகளால் மிரண்டு போன தயாரிப்பாளர் துரை, சரவணாவை சிம்புவிடமே விற்று விட்டார்.இதனால் கடைசி நேரத்தில் பல கிளுகிளுப்பான காட்சிகளை சேர்த்துள்ளாராம் சிம்பு. அதில் முக்கியமானது மேக்னா நாயுடுவும், அவரும் போட்டுள்ள குத்துப் பாட்டு. ஹீரோயின் ஜோதிகா என்பதாலும், முதல்படமான மன்மதனில், ஜோதிகாவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தாலும், சரவணாவில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்தார்சிம்பு. இப்போது படம் தனது முழு கஸ்டடியில் வந்துள்ளதால், தனது டேஸ்ட்டுக்கு ஏற்ப சில காட்சிகளை இணைத்துள்ளாராம்.மேக்னா நாயுடுவின் குத்துப் பாட்டு முதலில் படத்தில் இல்லையாம். ஆனால் சிம்புவின் வற்புறுத்தலால் அந்தக் குத்துப் பாட்டைஇணைக்க கே.எஸ். ரவிக்குமார் இசைவு தெரிவித்தாராம். அதேபோல தனது தங்கச்சி வேடத்தில் நடிக்கும் தாரிகாவையும், படு கிளாமராக காட்டியுள்ளாராம் சிம்பு.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டுச் சரக்கு நச்சுன்னு தான் இருக்கு என்று தனுஷுடன் கெட்ட ஆட்டம்போட்டவர் இந்த தாரிகா. நிஷா என்ற இயற் பெயர் கொண்ட இவர் விபச்சார வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் கட்டி வெளியேவந்தவர். அதன் பின்னர் தனது பெயரை தாரிகா என்று மாற்றிக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடினார். படு கவர்ச்சி காட்டியும் சரிவர படங்கள் வராததால், டிவி தொடர்களுக்குத் தாவி விட்டார். இவர் ஏற்கனவே கன்னடப் படங்களில்(அம்மணிக்கு சொந்த ஊரே பெங்களூருதான்!) கிளாமர் ரோல்களில் நடித்து கன்னடர்களை குளிர்வித்தவர். புதுக்கோட்டையிலிருந்து சரவணனுக்குப் பிறகு ஒதுங்கியிருந்த தாரிகாவைக் கூப்பிட்டு தனது தங்கச்சி வேடத்தில் நடிக்கவைத்துள்ளார் சிம்பு. கிளாமருடன் கூடிய வேடமாக இது அமைந்ததால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற அடிப்படையில்ஈடுபாட்டோடு நடித்துக் கொடுத்துள்ளாராம் தாரிகா. சரவணா மூலம் தனக்கு ஒரு பிரேக் கிடைக்கும், அதற்காக சிம்புவுக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் தான் நன்றிக் கடன்பட்டிருப்பதாக தாரிகா சந்தோஷமாக கூறுகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கத் தான் தயாராக இருப்பதாகவும், சரிவரவாய்ப்புகள் இல்லாவிட்டால் மீண்டும் டிவி பக்கம் செல்லப் போவதாகவும் தாரிகா கூறுகிறார். சிம்பு படம்னாலே கிளாமர் காட்சிகளுக்குக் குறைவிருக்காது என்ற இமேஜ் விழுந்து விட்டது. தங்கச்சி வேடத்திலும் கிளாமரைகூடுதலாக்கிய சிம்புவின் மச்சமே மச்சம்.

    By Staff
    |

    சிம்புவின் முழு கஸ்டடியில் வந்துள்ள சரவணா படத்தில் சிம்புவின் தலையீட்டின் பேரில் கிளாமர் காட்சிகளைகூடுதலாக்கியுள்ளனராம்.

    துரையின் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில், சிம்பு, ஜோதிகா இணையில் உருவாகியுள்ள சரவணா ரிலீஸுக்குத்தயாராகி விட்டது.

    சிம்பு வைத்த எக்குத்தப்பான செலவுகளால் மிரண்டு போன தயாரிப்பாளர் துரை, சரவணாவை சிம்புவிடமே விற்று விட்டார்.இதனால் கடைசி நேரத்தில் பல கிளுகிளுப்பான காட்சிகளை சேர்த்துள்ளாராம் சிம்பு.


    அதில் முக்கியமானது மேக்னா நாயுடுவும், அவரும் போட்டுள்ள குத்துப் பாட்டு. ஹீரோயின் ஜோதிகா என்பதாலும், முதல்படமான மன்மதனில், ஜோதிகாவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தாலும், சரவணாவில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்தார்சிம்பு.

    இப்போது படம் தனது முழு கஸ்டடியில் வந்துள்ளதால், தனது டேஸ்ட்டுக்கு ஏற்ப சில காட்சிகளை இணைத்துள்ளாராம்.மேக்னா நாயுடுவின் குத்துப் பாட்டு முதலில் படத்தில் இல்லையாம். ஆனால் சிம்புவின் வற்புறுத்தலால் அந்தக் குத்துப் பாட்டைஇணைக்க கே.எஸ். ரவிக்குமார் இசைவு தெரிவித்தாராம்.

    அதேபோல தனது தங்கச்சி வேடத்தில் நடிக்கும் தாரிகாவையும், படு கிளாமராக காட்டியுள்ளாராம் சிம்பு.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டுச் சரக்கு நச்சுன்னு தான் இருக்கு என்று தனுஷுடன் கெட்ட ஆட்டம்போட்டவர் இந்த தாரிகா.


    நிஷா என்ற இயற் பெயர் கொண்ட இவர் விபச்சார வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் கட்டி வெளியேவந்தவர். அதன் பின்னர் தனது பெயரை தாரிகா என்று மாற்றிக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடினார்.

    படு கவர்ச்சி காட்டியும் சரிவர படங்கள் வராததால், டிவி தொடர்களுக்குத் தாவி விட்டார். இவர் ஏற்கனவே கன்னடப் படங்களில்(அம்மணிக்கு சொந்த ஊரே பெங்களூருதான்!) கிளாமர் ரோல்களில் நடித்து கன்னடர்களை குளிர்வித்தவர்.

    புதுக்கோட்டையிலிருந்து சரவணனுக்குப் பிறகு ஒதுங்கியிருந்த தாரிகாவைக் கூப்பிட்டு தனது தங்கச்சி வேடத்தில் நடிக்கவைத்துள்ளார் சிம்பு. கிளாமருடன் கூடிய வேடமாக இது அமைந்ததால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற அடிப்படையில்ஈடுபாட்டோடு நடித்துக் கொடுத்துள்ளாராம் தாரிகா.


    சரவணா மூலம் தனக்கு ஒரு பிரேக் கிடைக்கும், அதற்காக சிம்புவுக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் தான் நன்றிக் கடன்பட்டிருப்பதாக தாரிகா சந்தோஷமாக கூறுகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கத் தான் தயாராக இருப்பதாகவும், சரிவரவாய்ப்புகள் இல்லாவிட்டால் மீண்டும் டிவி பக்கம் செல்லப் போவதாகவும் தாரிகா கூறுகிறார்.

    சிம்பு படம்னாலே கிளாமர் காட்சிகளுக்குக் குறைவிருக்காது என்ற இமேஜ் விழுந்து விட்டது. தங்கச்சி வேடத்திலும் கிளாமரைகூடுதலாக்கிய சிம்புவின் மச்சமே மச்சம்.

      Read more about: tarika acts as simbu sister
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X