குடிசைவாசிகளிடம் சிக்கி அடி வாங்கிய சிம்பு! குடிசைவாசிகளிடம் தகராறு செய்யப் போய் அவர்களிடம் செம்மையாக அடி வாங்கியுள்ளார் நடிகர் சிம்பு.நடிகர் சிம்புவின் வீடு சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா உள்ள பகுதியில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு சிம்பு தனதுநண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் படுவேமாக அந்தப் பக்கம் வந்துள்ளார். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில்,குடிசைவாசிகள் சிலர் சாலையோரம் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தனர்.சிம்பு ஓட்டி வந்த பைக் படு வேகமாக வந்ததில், குடிசைவாசிகள் சிலர் பயந்துபோய் ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது பைக்லேசாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், யோவ், மெதுவா போப்பா என்று சத்தமாக கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் கோபமடைந்த சிம்பு, வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக இறங்கி அவர்களிடம் வந்து, என்னையா மெதுவாபோன்னு சொல்றே என்று கேட்டு, அவ்வாறு கூறியவரை அடித்துள்ளார். இதைப் பார்த்த மற்ற குடிசைவாசிகள் ஒன்று கூடிவிட்டனர்.இருட்டில் சிம்புவை அடையாளம் தெரியாத அவர்கள், நம்ம ஏரியா ஆளை ஒருத்தன் அடிக்கிறான் என்று கூறிக் கொண்டேஅத்தனை பேரும் சேர்ந்து தாறுமாறாக சிம்புவை போட்டு விளாசியுள்ளனர். இதில் சிம்புவின் மூக்கு, உதடு கிழிந்து போய் ரத்தம் வந்து விட்டது.அடிபட்டது யார் என்று முகத்தைப் பார்ப்பதற்காக சிம்புவை தெருவிளக்கு வெளிச்சத்துக்கு குடிசைவாசிகள் இழுந்துவந்தபோதுதான் அது சிம்பு எனத் தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ரத்தமும், காயமுமாக மகன் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போன அவரது தந்தை விஜய. டி.ராஜேந்தர் நடந்தததைக்கேட்டுள்ளார். பின்னர் கோபத்துடன் தனது காரில் ஏறி அந்த குடிசைப் பகுதிக்கு வந்துள்ளார்.எவன்டா என் மகனை அடிச்சது என்று செயின் ஜெயபால் ரேஞ்சில் மிகக் கோபமாக கேட்டுள்ளார். முடியை சிலுப்பியுள்ளார்.இதையடுத்து மக்கள் மீண்டும் மொத்தமாக திரண்டு வந்துள்ளனர்.நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த விஜய டி.ராஜேந்தர் அப்படியே ஜகா வாங்கி வீட்டுக்குப் போய் விட்டார். மகன்அடிவாங்கிய விஷயத்தை அவர் போலீஸில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நமக்குத்தான் வம்பு என்று பயந்த அவர்டாக்டரையும் வீட்டுக்கே வரவழைத்து சிம்புவுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளார்.இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிம்பு பல நடிகைகளுடன் சேர்ந்து சுற்றுகிறார், சகநடிகைகளிடம் அத்துமீறி பேசுகிறார், நடக்கிறார், துணை நடிகைகளைக் கூட அவர் விடுவதில்லை என்று ஏகப்பட்ட செய்திகள்வெளியாகி வரும் நிலையில், இப்போது குடிசைவாசிகளிடம் அவர் தகராறு செய்து அடி வாங்கியுள்ளார் என்ற தகவல் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Staff

குடிசைவாசிகளிடம் தகராறு செய்யப் போய் அவர்களிடம் செம்மையாக அடி வாங்கியுள்ளார் நடிகர் சிம்பு.

நடிகர் சிம்புவின் வீடு சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா உள்ள பகுதியில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு சிம்பு தனதுநண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் படுவேமாக அந்தப் பக்கம் வந்துள்ளார். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில்,குடிசைவாசிகள் சிலர் சாலையோரம் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தனர்.

சிம்பு ஓட்டி வந்த பைக் படு வேகமாக வந்ததில், குடிசைவாசிகள் சிலர் பயந்துபோய் ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது பைக்லேசாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், யோவ், மெதுவா போப்பா என்று சத்தமாக கூறியுள்ளனர்.


இதைக் கேட்டதும் கோபமடைந்த சிம்பு, வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக இறங்கி அவர்களிடம் வந்து, என்னையா மெதுவாபோன்னு சொல்றே என்று கேட்டு, அவ்வாறு கூறியவரை அடித்துள்ளார். இதைப் பார்த்த மற்ற குடிசைவாசிகள் ஒன்று கூடிவிட்டனர்.

இருட்டில் சிம்புவை அடையாளம் தெரியாத அவர்கள், நம்ம ஏரியா ஆளை ஒருத்தன் அடிக்கிறான் என்று கூறிக் கொண்டேஅத்தனை பேரும் சேர்ந்து தாறுமாறாக சிம்புவை போட்டு விளாசியுள்ளனர். இதில் சிம்புவின் மூக்கு, உதடு கிழிந்து போய் ரத்தம் வந்து விட்டது.

அடிபட்டது யார் என்று முகத்தைப் பார்ப்பதற்காக சிம்புவை தெருவிளக்கு வெளிச்சத்துக்கு குடிசைவாசிகள் இழுந்துவந்தபோதுதான் அது சிம்பு எனத் தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.


ரத்தமும், காயமுமாக மகன் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போன அவரது தந்தை விஜய. டி.ராஜேந்தர் நடந்தததைக்கேட்டுள்ளார். பின்னர் கோபத்துடன் தனது காரில் ஏறி அந்த குடிசைப் பகுதிக்கு வந்துள்ளார்.

எவன்டா என் மகனை அடிச்சது என்று செயின் ஜெயபால் ரேஞ்சில் மிகக் கோபமாக கேட்டுள்ளார். முடியை சிலுப்பியுள்ளார்.இதையடுத்து மக்கள் மீண்டும் மொத்தமாக திரண்டு வந்துள்ளனர்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த விஜய டி.ராஜேந்தர் அப்படியே ஜகா வாங்கி வீட்டுக்குப் போய் விட்டார். மகன்அடிவாங்கிய விஷயத்தை அவர் போலீஸில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நமக்குத்தான் வம்பு என்று பயந்த அவர்டாக்டரையும் வீட்டுக்கே வரவழைத்து சிம்புவுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளார்.

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிம்பு பல நடிகைகளுடன் சேர்ந்து சுற்றுகிறார், சகநடிகைகளிடம் அத்துமீறி பேசுகிறார், நடக்கிறார், துணை நடிகைகளைக் கூட அவர் விடுவதில்லை என்று ஏகப்பட்ட செய்திகள்வெளியாகி வரும் நிலையில், இப்போது குடிசைவாசிகளிடம் அவர் தகராறு செய்து அடி வாங்கியுள்ளார் என்ற தகவல் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X