கமல் படத்தில் சிம்ரன்! சின்ன இடை சிம்ரனை தனது தசாவதாரம் படத்தில் நடிக்க கமல்ஹாசன்அழைத்துள்ளாராம். சிம்ரனும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டதாககோலிவுட்டில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.அப்பாஸ், அப்புறம் சரத்குமார், இடையே ராஜு சுந்தரம் என ஏகப்பட்ட பேருடன்கிசுகிசுக்கப்பட்டவர் சிம்ரன். கல்யாணமாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை கமல்ஹாசனுடன் சேர்ந்துபயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டார்.இருவருமே கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட செய்திகள் பரவின.சிம்ரனால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் கமலை விட்டு விலகினார் சரிகா.ஆனால் திடீரென டெல்லிக்குப் பறந்து போய் தீபக் பாஹாவை கல்யாணம் செய்துகொண்டு செட்டிலானார் சிம்ரன்.சினிமாவில் உயர்ந்த வேகத்தில் சிம்ரனின் கல்யாணமும் படு வேகமாக நடந்துமுடிந்து இப்போது அம்மாவும் ஆகி விட்டார்.குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னை அழகாக்கிக் கொண்டு மீண்டும்சென்னைக்கு வந்து முகாமிட்டுள்ளார் சிம்ரன். பட வாய்ப்புகளைத் தேடி அவர்காத்திருந்தும் பெரிய அளவில் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. இதனால் சும்மா இருப்பதற்குப் பதில் காசு தேத்தலாமே என்று அதிமுகவுக்குஆதரவாக சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்தார். அதில் நல்ல டப்பு தேறியதாககூறுகிறார்கள்.இடையில் தெலுங்கில் ஒரு படத்தில் புக் ஆகி கழற்றிவிட்டுவிட்டார்கள்.கல்யாணத்திற்கு முன்பு இருந்த கிரேஸ் இப்போது சிம்ரனுக்கு இல்லை. படம்கிடைக்காமல், தன்னை சீந்தவும் ஆள் இல்லாமல் அப்செட் ஆகிக் கிடந்த சிம்ரனுக்குசந்தோஷம் தரும் வகையில் ஒரு சூப்பர் ஆஃபர் வந்துள்ளதாம்.அதுவும் யாரிடமிருந்து தெரியுமா? கமல்ஜியிடமிருந்து! கமல் தரப்பிலிருந்து சிம்ரனுடன் தொலைபேசி அழைப்பு வந்ததாம்.தசாவதாரம் படத்தில் நடிக்க வேண்டும் என்று சிம்ரனைக் கேட்டுள்ளனர். இந்தஎதிர்பாராத அழைப்பு சிம்ரனை திக்குமுக்காட வைத்து விட்டதாம். இதுகுறித்து தனதுகணவருடன் ஆலோசித்துள்ளார்.நடிக்கத்தானே என்று கேட்ட அவர் ஓ.கே. சொல்லி விட்டாராம். இதனால் தசாவதாரம்படத்தில் கமல்ஹாசனுடைய பல ஜோடிகளில் ஒருவராக சிம்ரனும் வெளுத்துக் கட்டப்போகிறார். கமலுக்கு தசாவதாரம் படத்தில் மொத்தம் 9 வேடங்கள். இதில் ஐந்து பேருக்கு ஜோடிபோடத் திட்டமிட்டிருக்கிறார்கள். திரிஷா, நயனதாரா, அசின் என முன்னணிநடிகைகள் சிலரை முடிவு செய்துள்ளார்கள்.ஒரு கேரக்டருக்கு ஆள் கிடைக்காமல் இருந்ததாம். இப்போது அந்த இடத்திற்குத்தான்சிம்ரனை சேர்த்துள்ளார்கள்.
சின்ன இடை சிம்ரனை தனது தசாவதாரம் படத்தில் நடிக்க கமல்ஹாசன்அழைத்துள்ளாராம். சிம்ரனும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டதாககோலிவுட்டில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.
அப்பாஸ், அப்புறம் சரத்குமார், இடையே ராஜு சுந்தரம் என ஏகப்பட்ட பேருடன்கிசுகிசுக்கப்பட்டவர் சிம்ரன்.
கல்யாணமாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை கமல்ஹாசனுடன் சேர்ந்துபயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டார்.
இருவருமே கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட செய்திகள் பரவின.சிம்ரனால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் கமலை விட்டு விலகினார் சரிகா.ஆனால் திடீரென டெல்லிக்குப் பறந்து போய் தீபக் பாஹாவை கல்யாணம் செய்துகொண்டு செட்டிலானார் சிம்ரன்.
சினிமாவில் உயர்ந்த வேகத்தில் சிம்ரனின் கல்யாணமும் படு வேகமாக நடந்துமுடிந்து இப்போது அம்மாவும் ஆகி விட்டார்.
குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னை அழகாக்கிக் கொண்டு மீண்டும்சென்னைக்கு வந்து முகாமிட்டுள்ளார் சிம்ரன். பட வாய்ப்புகளைத் தேடி அவர்காத்திருந்தும் பெரிய அளவில் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை.
இதனால் சும்மா இருப்பதற்குப் பதில் காசு தேத்தலாமே என்று அதிமுகவுக்குஆதரவாக சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்தார். அதில் நல்ல டப்பு தேறியதாககூறுகிறார்கள்.
இடையில் தெலுங்கில் ஒரு படத்தில் புக் ஆகி கழற்றிவிட்டுவிட்டார்கள்.
கல்யாணத்திற்கு முன்பு இருந்த கிரேஸ் இப்போது சிம்ரனுக்கு இல்லை. படம்கிடைக்காமல், தன்னை சீந்தவும் ஆள் இல்லாமல் அப்செட் ஆகிக் கிடந்த சிம்ரனுக்குசந்தோஷம் தரும் வகையில் ஒரு சூப்பர் ஆஃபர் வந்துள்ளதாம்.
அதுவும் யாரிடமிருந்து தெரியுமா? கமல்ஜியிடமிருந்து!
கமல் தரப்பிலிருந்து சிம்ரனுடன் தொலைபேசி அழைப்பு வந்ததாம்.
தசாவதாரம் படத்தில் நடிக்க வேண்டும் என்று சிம்ரனைக் கேட்டுள்ளனர். இந்தஎதிர்பாராத அழைப்பு சிம்ரனை திக்குமுக்காட வைத்து விட்டதாம். இதுகுறித்து தனதுகணவருடன் ஆலோசித்துள்ளார்.
நடிக்கத்தானே என்று கேட்ட அவர் ஓ.கே. சொல்லி விட்டாராம். இதனால் தசாவதாரம்படத்தில் கமல்ஹாசனுடைய பல ஜோடிகளில் ஒருவராக சிம்ரனும் வெளுத்துக் கட்டப்போகிறார்.
கமலுக்கு தசாவதாரம் படத்தில் மொத்தம் 9 வேடங்கள். இதில் ஐந்து பேருக்கு ஜோடிபோடத் திட்டமிட்டிருக்கிறார்கள். திரிஷா, நயனதாரா, அசின் என முன்னணிநடிகைகள் சிலரை முடிவு செய்துள்ளார்கள்.
ஒரு கேரக்டருக்கு ஆள் கிடைக்காமல் இருந்ததாம். இப்போது அந்த இடத்திற்குத்தான்சிம்ரனை சேர்த்துள்ளார்கள்.


Click it and Unblock the Notifications