Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிங்கம் 3... சிபிஐ அதிகாரி அவதாரம் எடுக்கும் சூர்யா!
சென்னை: இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிங்கம். சிங்கம் படத்தின் வெற்றியால் அதன் இரண்டாம் பாகமான சிங்கம் 2 வும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.
தற்பொழுது அதன் மூன்றாம் பாகமான சிங்கம் 3 படத்தை எடுக்கவிருக்கும் இயக்குநர் ஹரி படத்தின் முழுக் கதையையும் தயார் செய்து விட்டு சூர்யாவிற்காக காத்திருக்கிறார். 24 மற்றும் ஹைக்கூ படங்களில் பிஸியாக நடித்து வரும் சூர்யா இந்த 2 படங்களையும் முடித்து விட்டு சிங்கம் 3 யில் நடிக்க இருக்கிறார்.
வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹரியும் நடிகர் சூர்யாவும் இணைகின்ற 5 வது படம் இது.
சிங்கம் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா இந்தப் படத்தில் முதல் முறையாக சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இந்தமுறை சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் சுருதி ஹாசன் நடிக்கிறார். விரைவில் படத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று கூறுகின்றனர்.