Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மிரட்டல் விவகாரம்: பணம் வாங்கியதை ஒப்புக் கொண்ட சிவகார்த்திகேயன், ஆனால்...
சென்னை: ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் புதுப்படத்திற்கு முன்பணம் வாங்கியதாக சிவகார்த்திகேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பி.எல். தேனப்பன் தெரிவித்துள்ளார்.
தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி சிவகார்த்திகேயன் ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதார். புதுப்படத்திற்காக அவருக்கு முன்பணம் கொடுத்ததாக எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவா முன்பணத்தை வாங்கிவிட்டு தங்களுக்கு படம் பண்ணாமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பி.எல். தேனப்பன் பிரபல இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் சிவா மீது புகார் அளித்துள்ளனர். அதில் ஞானவேல்ராஜாவிடம் மட்டும் ஒப்பந்த நகல் உள்ளது. மற்ற இருவரும் பணம் கொடுத்துவிட்டு 2 ஆண்டுகளாக காத்திருப்பதாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் புதுப்படத்திற்கு முன்பணம் வாங்கியதாக சிவகார்த்திகேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து பேசப்படும் என டி. சிவா தெரிவித்துள்ளார் என்றார்.