ஒரு கோடி கேட்டு தயாரிப்பாளரை விரட்டிய சிவகார்த்திகேயன்!

மெரினா என்ற சுமாரான படத்தில் அறிமுகமாகி, அடுத்தடுத்த இரண்டு சொதப்பல் படங்களில் நடித்தவர் சிவகார்த்திகேயன்.
கோவையைச் சேர்ந்த வசதியான நபர் ஒருவர், சினிமா எடுக்கும் ஆசையில் சென்னை வந்தாராம்.
கோடம்பாக்கத்தில் ஹீரோக்கள் ரேட்டையெல்லாம் விசாரித்த அந்த நபர், 'சிவகார்த்திகேயன் கொஞ்சம் சீப்பா கிடைப்பாரு' என்று யாரோ சொன்னதை நம்பி, அந்தத் தம்பியிடம் போயிருக்கிறார்.
கதை மற்றும் பட்ஜெட்டையெல்லாம் கேட்டுக் கொண்ட சிவ கார்த்திகேயன், தனக்கு சம்பளமாக மட்டும் ஒரு கோடி ப்ளஸ் அஞ்சலியை ஹீரோயினாகக் கேட்டாராம்.
அடுத்த நாள் அந்தத் தயாரிப்பாளரின் கார் நேராகப் போய் நின்ற இடம் அவரது கோவை வீடுதானாம்.
ஆணியே புடுங்க வேணாம்... கோடம்பாக்கத்து ஒரு கும்பிடு! என்று கூறிவிட்டாராம், தன்னை சென்னைக்கு அழைத்துப் போன புரோக்கர் நண்பரிடம்!


Click it and Unblock the Notifications











