Don't Miss!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனா தடுப்பு நடவடிக்கை... முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
ஈரான், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
'இன்னும் எதிர்பார்க்கிறோம்..' எக்சர்சைஸ் போட்டோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்...கலாய்க்கும் ஃபேன்ஸ்!
வாழ்வாதாரம்
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வேண்டுகோள்
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
நிவாரண நிதி
அதில், கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டும், ஏழை, எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், நோய்த் தடுப்புக்காகவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து தங்கள் பங்களிப்பை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது' என்று கூறி இருந்தது.
சிவகார்த்திகேயன்
அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(ஜி)-ன் கீழ் 100 சதவிகித வரிவிலக்கு உண்டு என்றும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சில நிறுவனங்கள் நிதி உதவியை செய்து வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், 25 லட்சம் ரூபாயை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.