விபத்தில் சிக்கி சிவகார்த்திகேயன் படுகாயம்: தீயா பரவிய வதந்தி
சென்னை: சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கி அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் சாதித்து வருபவர் சிவகார்த்திகேயன். குட்டீஸ் ரசிகர்களை அவர் தன் பக்கம் ஈர்த்துவிட்டதாக இளைய தளபதி விஜய்யே விருது விழா ஒன்றில் தெரிவித்தார்.

சிவா தற்போது தனுஷ் தயாரிப்பில் டாணா படத்தில் நடித்து வருகிறார். படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் செய்தி பரவியது.
இதையடுத்து பலர் சிவகார்த்திகேயனின் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது இந்த விபத்து செய்தி வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. சிவகார்த்திகேயன் பாடல் காட்சியில் நடிக்க நார்வே சென்றுள்ளார். இந்த நேரத்தில் தான் இப்படி ஒரு வதந்தி பரவியுள்ளது.


Click it and Unblock the Notifications











