Just In
- 5 hrs ago
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- 6 hrs ago
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!
- 6 hrs ago
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
- 8 hrs ago
திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!
Don't Miss!
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவகார்த்திகேயனுடன் நடனமாடிய ராம்சரண்.. கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது !
சென்னை : ராம் சரணுடன் சிவகார்த்திகேயன் "ஏன்டி இங்க" என்ற பாடலுக்கு மேடையில் இணைந்து நடனமாடினார். இவர்கள் இருவரும் நடனமாடுவதை பார்த்து அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.
ராம் சரண் தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான நடிகர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்து தற்போது தெலுங்கு சினிமாவில் மிக பெரிய நாயகனாக உயர்ந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் மக்களின் சிறந்த எண்டர்டெயினர் என்று விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி இருந்தது . இதற்கு பல நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக பலர் வந்து இருந்தனர். இந்த விழாவில் நடிகர் ராம்சரணுக்கு இயக்குனர் ஷங்கர் விருது வழங்கி கௌரவித்தார்.
அப்போது விழாவில் பேசிய ராம்சரண் முதலில் அனைவருக்கும் நன்றி, நான் சென்னை வரவேண்டும் என்று எப்போதும் நினைப்பதுண்டு ஆனால் அதற்கான சரியான நேரம் அமையவில்லை தற்போது இப்படி ஒரு விருது வழங்கும் விழா அமைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்றார்.
நான் சென்னையில் தான் பிறந்தேன், சென்னையில் தான் தனது ஆரம்ப கல்வியை பயின்றதாகவும் ராம்சரண் கூறினார். மேலும், விருது வழங்கும் விழாவிற்கு போக பிடிக்காது பல மணி நேரம் விழாவை உட்கார்ந்து பார்க்க வேண்டும், ஒரே இடத்தில் உங்கார என்னால முடியாது என்றார். ஆனால், இந்த விழா சென்னையில் நடப்பதால் ஆர்வமுடன் பங்கு கொள்ள வந்து இருக்கின்றேன் என்றார் .

அப்போது மேடையில் தொகுப்பாளர் ராம்சரணை ஆடும் படி கேட்டு கொண்டார் அதற்கு ராம் சரண், சிவகார்த்திகேயன் வந்தால் தான் ஆடுவேன் என்றும் கூறினார். தனது தங்கை சிவகார்த்திகேயனின் பெரிய ரசிகை வீட்டில் அனைவரும் சிவகார்த்திகேயன் படம் என்றால் விரும்பி பார்போம் என்றும் கூறினார்.
ராம்சரணின் வேண்டுகொள்ளுக்கு இணங்க மேடை ஏறி வந்த சிவகார்த்திகேயன் ராம் சரணுடன் "ஏன்டி இங்க" என்ற பாடலுக்கு இருவரும் நடனமாடினர். இவர்கள் இருவரும் நடனமாடுவதை பார்த்து அரங்கமே கைதட்டில் நிரம்பி வழிந்தது.