Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகர்களுக்காக சமூக வலைத் தளங்களில் சண்டை போடாதீங்கப்பா! - சிவகார்த்திகேயன் அட்வைஸ்
சென்னை: அவரவருக்குப் பிடித்த நடிகர்களுக்காக சமூக வலைத் தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்காமல், உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.
சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டுள்ளது.
ரசிகர்கள் மோதல்
இந்தப் படம் வந்த நாளிலிருந்து சிவகார்த்திகேயன்தான் இனி இளையதளபதி என்றெல்லாம் சிலர் சமூக வலைத் தளங்களில் எழுத, விஜய்யின் ரசிகர்கள் பொங்கிவிட்டனர். இது இரு தரப்பு ரசிகர்களுக்கும் சமூக வலைத் தளங்களில் மோதலை ஏற்படுத்திவிட்டது.
சிவகார்த்திகேயன் அட்வைஸ்
இதைக் கவனித்த சிவகார்த்திகேயன், ரசிகர்கள் எதற்காக இப்படி அடித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார்.
யார் இடத்தை யாரும் பிடிக்க முடியாது
அவர் கூறுகையில், "என்னை அடுத்த விஜய் என்று பேசி வருகிறார்கள். யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்கமுடியாது. அது அவர்களுக்கான இடம்.
தவறாக
சமூக வலைதளங்களின் சக்தி தெரியாமல் சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். தனக்கு பிடித்த நடிகருக்காக சண்டை போடுவதற்கு சமூக வலைதளங்கள் உருவாக்கப்படவில்லை.
மக்களுக்கு நல்லது பண்ணுங்க
மக்களுக்கு உருப்படியாக தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய பயன்படுத்தப்பட வேண்டிய சமூக வலைதளங்கள் இந்த மாதிரி பயன்படுத்தப்படுவதற்கு நாம் அனைவரும் வருத்தப்பட வேண்டும். சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்குபவர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டால் அது பலருக்கு நன்மையை அளிக்கும்," என்றார்.