Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
குண்டர்களை வைத்துக் கொள்ளுமளவுக்கு நான் வசதியானவன் இல்லை - சிவகார்த்திகேயன்
மான் கராத்தே இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் எனப்படும் குண்டர்களை நான் நியமிக்கவில்லை. அந்த அளவுக்கு நான் வசதியானவன் இல்லை என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்- எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரித்திருக்கும் படம் மான் கராத்தே. சிவகார்த்திகேயன் - ஹன்சிகா நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் அரங்கில் நடந்தது.
விழாவிற்கு பத்திரிகையாளர்களும், மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் வந்தபோது 'பவுன்சர்கள்' என்று சொல்லப்பட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.
பவுன்சர்கள்
இதனால் விழாவிற்கு வந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்கள். இதனால் சிவகார்த்திகேயன் அடியாட்கள் வைத்து மீடியாக்காரர்களை சிரமத்துக்குள்ளாக்கியதாக செய்தி பரவியது. மேலும் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினியே உதவியாளர் கூட இல்லாமல் எளிமையாக தன் கோச்சடையான் விழாவை நடத்திய நிலையில், வளரும் நடிகரான சிவகார்த்திக்கு இது தேவையா என்றும் கேள்வி எழுந்தது.
மறுப்பு
இதற்கு செய்தியாளர்களை அழைத்து மறுப்பு தெரிவித்த சிவகார்த்திகேயன், தனக்கும் அடியாட்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று மறுத்தார். தான் அந்த அளவுக்கு வசதியானவன் இல்லை என்றும் தன் சம்பளம் அந்த அளவுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒழுங்குபடுத்த
தயாரிப்பாளர் கூறுகையில், "பவுன்சர்களை நியமித்தது நாங்கள்தான். விழாவிற்கு நிறைய பிரமுகர்கள், ரசிகர்கள் வருவார்கள். அவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவே இவ்வாறு ஏற்பாடு செய்தேன். ஆனால் அது வேறுமாதிரியாக மாறிவிட்டது. இனிமேலும் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்," என்றார்.
ஹன்சிகா
ஹன்சிகாவின் காதல் தோல்விக்கு நீங்கள் ஆலோசனை கூறினீர்களா என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டதற்கு, "இது அவர்களுடைய தனிப்பட்ட விசயம். நான் எப்படி தலையிடுவது? என்று பதில் அளித்தார்.
அனிருத்
படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பேசும் போது, ‘பாடல்கள் வெற்றியடைந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தின் பாடல்களை கேட்டு பலர் பாராட்டுகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்' என்றார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!