Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்
Recommended Video
சென்னை: நயன்தாரா படத்திற்கு கிடைத்த சம்பளத்தை நா. முத்துக்குமாரின் குடும்பத்தாருக்கு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் இருந்து வந்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வருபவர்கள் சிவகார்த்திகேயன் போன்று ஆக வேண்டும் என்று அவரை ரோல் மாடலாக பார்க்கிறார்கள்.
தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என்று புதுப்புது அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் கல்யாண வயசு பாடலை எழுதியவர் உங்கள் சிவகார்த்திகேயன்.
அந்த பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் 36 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில் அந்த பாடலுக்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 2 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
அவரோ சம்பளத்தை வாங்காமல் அதை மறைந்த பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமாரின் குடும்பத்திற்கு கொடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டாராம்.
நா. முத்துக்குமாரை மிஸ் பண்ணுகிறோம், அவரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று திரையுலகை சேர்ந்த பலரும் தெரிவித்தனர். ஆனால் அவர் குடும்பத்திற்கு பண உதவி செய்துள்ள சிவகார்த்திகேயனின் நல்ல மனதை பலரும் பாராட்டியுள்ளனர்.