Don't Miss!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்
Recommended Video
சென்னை: நயன்தாரா படத்திற்கு கிடைத்த சம்பளத்தை நா. முத்துக்குமாரின் குடும்பத்தாருக்கு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் இருந்து வந்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வருபவர்கள் சிவகார்த்திகேயன் போன்று ஆக வேண்டும் என்று அவரை ரோல் மாடலாக பார்க்கிறார்கள்.
தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என்று புதுப்புது அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் கல்யாண வயசு பாடலை எழுதியவர் உங்கள் சிவகார்த்திகேயன்.
அந்த பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் 36 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில் அந்த பாடலுக்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 2 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
அவரோ சம்பளத்தை வாங்காமல் அதை மறைந்த பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமாரின் குடும்பத்திற்கு கொடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டாராம்.
நா. முத்துக்குமாரை மிஸ் பண்ணுகிறோம், அவரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று திரையுலகை சேர்ந்த பலரும் தெரிவித்தனர். ஆனால் அவர் குடும்பத்திற்கு பண உதவி செய்துள்ள சிவகார்த்திகேயனின் நல்ல மனதை பலரும் பாராட்டியுள்ளனர்.