Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
நா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்
Recommended Video
சென்னை: நயன்தாரா படத்திற்கு கிடைத்த சம்பளத்தை நா. முத்துக்குமாரின் குடும்பத்தாருக்கு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் இருந்து வந்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வருபவர்கள் சிவகார்த்திகேயன் போன்று ஆக வேண்டும் என்று அவரை ரோல் மாடலாக பார்க்கிறார்கள்.
தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என்று புதுப்புது அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் கல்யாண வயசு பாடலை எழுதியவர் உங்கள் சிவகார்த்திகேயன்.
அந்த பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் 36 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில் அந்த பாடலுக்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 2 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
அவரோ சம்பளத்தை வாங்காமல் அதை மறைந்த பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமாரின் குடும்பத்திற்கு கொடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டாராம்.
நா. முத்துக்குமாரை மிஸ் பண்ணுகிறோம், அவரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று திரையுலகை சேர்ந்த பலரும் தெரிவித்தனர். ஆனால் அவர் குடும்பத்திற்கு பண உதவி செய்துள்ள சிவகார்த்திகேயனின் நல்ல மனதை பலரும் பாராட்டியுள்ளனர்.