Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நமக்காக போராடுறாங்க.. அவங்களை காயப்படுத்தலாமா.. மனித கடவுள்களுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்!
சென்னை: கொரோனா எனும் கொடிய வைரஸிடம் உலகமே சிக்கியிருக்கும் நிலையில், நமக்காக போராடும் மருத்துவர்களை காயப்படுத்தக் கூடாது என நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ போட்டு அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
கடந்த ஞாயிற்றுக் கிழமை, கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர் சைமனின் (55 வயது) உடலை அடக்கம் பண்ணக் கூடாது என மறியலில் மக்கள் சிலர் ஈடுபட்ட செயல், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஓம் மந்திரத்திற்கு முன்பு நிர்வாணமாக நின்ற பிரபல நடிகை.. கடவுள் என கோவில் சிற்பங்களுடன் ஒப்பீடு!
பயத்தின் காரணமாக மக்கள் அவ்வாறு செய்திருந்தாலும், அது மனிதாபிமானம் அற்ற செயல் என பலரும் கண்டித்திருந்தனர்.
மருத்துவர் உடல் அடக்கம்
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு மருத்துவருக்கு, மக்கள் செய்யும் நன்றிக் கடனா இது என்ற கேள்வியும் எழுந்திருந்தது. கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களை புதைத்தாலோ, எரித்தாலோ அந்த பகுதி மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டது.
#WeLoveDoctors
ஆம்புலன்ஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அராஜகம் செய்தவர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் வழக்கும் பதிந்துள்ளனர். இந்நிலையில், #WeLoveDoctors என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நடிகர் சிவகார்த்திகேயன், மக்களை காப்பாற்றும் மனித கடவுள்களாகிய மருத்துவர்களுக்கு நன்றி செலுத்துவது நமது கடமை என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
மருத்துவர்கள் வருத்தம்
மேலும், சமீபத்தில் நடந்த சம்பவம், மருத்துவர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும் பயத்தையும் உண்டு செய்திருப்பதாகவும், நமக்காக அவர்கள் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில், அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துவது ஒட்டுமொத்த மக்களின் கடமை ஆகும் எனக் கூறியுள்ளார்.
அரசு சொல்வதை கேளுங்க
மேலும், அரசு சொல்வதை கேட்டு, இன்னும் கொஞ்ச காலம் வீட்டிலேயே தனித்திருந்தோமேயானால், அனைவரும் விடுதலையாக வெளியே விரைவில் சுற்றும் நிலை உருவாகும் என்றும் கூறியுள்ளார். அரசு, அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை என பலருக்கும் இந்த வீடியோ மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?