Don't Miss!
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தன்னை தாக்கிய கமல் ரசிகர்களை சிவகார்த்திகேயன் ஏன் போலீசில் மாட்டிவிடவில்லை தெரியுமா?
சென்னை: தன்னை கமல் ஹாஸனின் ரசிகர்கள் தாக்கியது பற்றி தற்போது மவுனம் கலைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அபார வளர்ச்சி அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். யாராவது வம்பு இழுத்தால் ஒதுங்கிச் செல்வார் சிவா என பெயர் எடுத்தவர்.
இந்நிலையில் ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட அவர் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி அழுதார். தந்தி டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் மதுரை விமான நிலையத்தில் அவரை கமல் ஹாஸனின் ரசிகர்கள் தாக்கியது குறித்து கேட்கப்பட்டது.
இத்தனை நாட்களாக இது குறித்து அமைதி காத்த சிவா கூறுகையில்,
என்னை தாக்கியவர்கள் மீது நான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம். நான் புகார் கொடுத்திருந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் சிறைக்கு சென்றால் அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் வாழ்க்கை பாதிக்கப்படும். அதை நான் செய்ய விரும்பவில்லை என்றார்.