Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திக்கேயன்
"ஊரைக் காக்க உண்டான சங்கம்...
உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை...இது இல்லை....
நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை".....
இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல்.யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் செம ஹிட் அடித்துள்ளதாம்.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான சிவகார்த்திக்கேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் போன்ற படங்களில் நடித்து ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார்.
சிவகார்த்திக்கேயனின் காமெடி கலந்த நடிப்பு இளம் ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் சத்யராஜும் நடிக்கிறார். அவருக்கு ஜோடி பிந்து மாதவி.
இந்தப்படத்தின் இசையமைப்பாளர் இமான், முதன் முறையாக சிவகார்த்திக்கேயனை பாடகராக அறிமுகம் செய்துள்ளார். கிராமிய மனம் கமழும் இந்தப்பாடல் இப்போது யுடியூப் ஹிட் ஆகியுள்ளது. சினிமாவில் பின்னணி பாடிய அனுபவம் குறித்து பேசிய சிவகார்த்திக்கேயன், பள்ளி நாட்களில் நான் பாடும் போது என் குரலை கேட்டு நானே பயந்து இருக்கிறேன். இப்போது இமான் என்னிடம் பாடக் கேட்ட போது கூட அதைக் கூறி முதலில் மறுத்தேன். ஆனால் அவர் முயற்சி செய்யுங்கள் நன்றாக வரும் என்று ஊக்கப்படுத்தினார். அப்போது நான் கிராமிய பாடகர் அந்தோணிதாசன் பாடிய காசு பணம் துட்டு பாடலை மனதில் வைத்துக் கொண்டு பாட முயற்சி செய்தேன். இமான் கொடுத்த ஊக்கத்தால் சிறப்பாக பாட முடிந்தது என்றார். எப்படியோ ரஜினி, கமல்,விஜய், சிம்பு, தனுஷ் வரிசையில் நடிகராக இருந்து பாடகராகிவிட்டார் சிவகார்த்திக்கேயன்.