Don't Miss!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு.. ‘மாநாடு‘ விழாவில் எஸ்ஜே சூர்யா கலகல பேச்சு !
சென்னை : மாநாடு ட்ரெய்லரில் இடம்பெற்ற எஸ்.ஜே.சூர்யாவின் ட்ரெண்டிங் வசனமான "வந்தான்... சுட்டான்... செத்தான்... ரிப்பீட்டு வசனத்தை பேசி அனைவர் இடத்திலும் கைத்தட்டலை பெற்றார்.
Recommended Video
மாநாடு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மிரட்டலான வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. வேற மாறி தெறிக்கவிடும் தல ரசிகர்கள்.. #ValimaiPongal
மேலும், இயக்குனர் இமயம் பாரதிராஜா,மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மாநாடு
மாநாடு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்.எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள மாநாடு படத்திற்கு பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த மாநாடு படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மாநாடு திரைப்படம் நவம்பர் 25ந் தேதி வெளியாக உள்ளது.
ட்ரெண்டிங் வசனமான
இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே. சூர்யா, வெங்கட் பிரபு,சுரேஷ் காமாட்சி அனைவருக்கும் நன்றி என்று கூறினார். மேலும் மாநாடு திரைப்படத்தின் ட்ரெண்டிங் வசனமான "வந்தான்... சுட்டான்... செத்தான்... ரிப்பீட்டு வசனத்தை பேசி அனைவர் இடத்திலும் கைத்தட்டலை பெற்றார்.
மங்காத்தா BGMம் Copy Paste
மேலும், இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயினை விட தனக்கும் சிம்புவுக்கும் தான் கெமிஸ்ட்ரி இருப்பதாக கூறினார். மேலும் யுவன்சங்கர் ராஜா மங்காத்தாவில் BGMல் கூட Copy Paste பண்ணி இருப்பாரு ஆனால், மாநாடு திரைப்படத்திற்கு காட்சிக்கு காட்சி வேற BGM வருதுனு கூறிய அவர் நான் இதை குறையா சொல்லல ஒரு படம் அவரை அவ்வளவு உணர்வு பூர்வமாக யோசிக்க வைத்துள்ளது என்றார்.
நான் வில்லன் கிடையாது
தொடர்ந்து பேசிய சூர்யா, தான் என்றைக்குமே வில்லன் கிடையாது, நான் எப்போதும் ஹீரோதான் என்றும் கூறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தற்போது பொம்மை, கடமையை செய் உள்ளிட்ட திரைப்படங்களில் எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாபாத்திரங்களிலும், மாநாடு, டான் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் நடிக்கிறார். இவற்றைத் தவிர ஒரு வெப் சீரிஸிலிலும் நடித்து வருவதாகவும் கூறினார்.