twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷங்கர் படத்தில் வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா… சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

    |

    சென்னை : பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கும் திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஷங்கர் முதன் முதலாக இயக்கும் நேரடி தெலுங்கு திரைப்படம் இதுவாகும்.

    பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    வறுமையின் கொடுமை...பிரபல நடிகையின் உறவுப்பெண் சகோதரருடன் தற்கொலை...வறுமையின் கொடுமை...பிரபல நடிகையின் உறவுப்பெண் சகோதரருடன் தற்கொலை...

    ராம்சரணின் RC15

    ராம்சரணின் RC15

    ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் RC15. ராம்சரணின் 15வது திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 8ந் தேதியிலிருந்து ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    எஸ்.ஜே.சூர்யா

    எஸ்.ஜே.சூர்யா

    இந்நிலையில், இத்திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. வாலி, குஷி, நியூ போன்ற வித்தியாசமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, நியூ திரைப்படத்தில் ஹீரோவாக தனது அறிமுகத்தை கொடுத்தார். மேலும், மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் சைக்கோ வில்லனாக மிரட்டி இருந்தார்.

    வந்தான் சுட்டான் ரிப்பீட்டு

    வந்தான் சுட்டான் ரிப்பீட்டு

    சிம்புவின் மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. அந்த படத்தில் தலைவரே... தலைவரே என்று சொல்லுவதும், வந்தான் சுட்டான் ரிப்பீட்டு... வந்தான் சுட்டான் ரிப்பீட்டு... என மாஸான வசனத்தை பேசி தெறிக்கவிட்டு இருப்பார். இந்த திரைப்படத்தை அடுத்து எஸ்.ஜே. சூர்யாவுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

    சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

    சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

    இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யா RC15 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்த கட்டபடப்பிடிப்பில் எஸ்.ஜே. சூர்யா கலந்து கொள்ள உள்ளார்.

    Recommended Video

    SJ Suryah, Nikki Kalrani in Aha OTT app Grand launch in Tamil |Allu Arjun, Allu Aravind
    ஆர்ஆர்ஆர்

    ஆர்ஆர்ஆர்

    ராம்சரண் நடித்து முடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் வெளியீட்டின் போது மீண்டும் அப்படத்திற்கான சில பிரமோஷன்களைச் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதால், ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸுக்கு பிறகே RC15 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும்.

    English summary
    Actor Sj surya to play villain role in ram charan Movie, ஷங்கர் இயக்கும் RC15 படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X