Don't Miss!
- Finance CHATGPT முதல் இந்திய ஊழியரை நியமித்தது.. யார் இந்த பிரக்யா மிஸ்ரா..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஷங்கர் படத்தில் வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா… சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
சென்னை : பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கும் திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷங்கர் முதன் முதலாக இயக்கும் நேரடி தெலுங்கு திரைப்படம் இதுவாகும்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
வறுமையின் கொடுமை...பிரபல நடிகையின் உறவுப்பெண் சகோதரருடன் தற்கொலை...
ராம்சரணின் RC15
ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் RC15. ராம்சரணின் 15வது திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 8ந் தேதியிலிருந்து ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
எஸ்.ஜே.சூர்யா
இந்நிலையில், இத்திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. வாலி, குஷி, நியூ போன்ற வித்தியாசமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, நியூ திரைப்படத்தில் ஹீரோவாக தனது அறிமுகத்தை கொடுத்தார். மேலும், மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் சைக்கோ வில்லனாக மிரட்டி இருந்தார்.
வந்தான் சுட்டான் ரிப்பீட்டு
சிம்புவின் மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. அந்த படத்தில் தலைவரே... தலைவரே என்று சொல்லுவதும், வந்தான் சுட்டான் ரிப்பீட்டு... வந்தான் சுட்டான் ரிப்பீட்டு... என மாஸான வசனத்தை பேசி தெறிக்கவிட்டு இருப்பார். இந்த திரைப்படத்தை அடுத்து எஸ்.ஜே. சூர்யாவுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.
சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யா RC15 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்த கட்டபடப்பிடிப்பில் எஸ்.ஜே. சூர்யா கலந்து கொள்ள உள்ளார்.
Recommended Video
ஆர்ஆர்ஆர்
ராம்சரண் நடித்து முடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் வெளியீட்டின் போது மீண்டும் அப்படத்திற்கான சில பிரமோஷன்களைச் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதால், ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸுக்கு பிறகே RC15 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும்.