Don't Miss!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திரைப்பட விருதுகள் கேலிக்கூத்தாக மாறிவிட்டன- அரவிந்த் சாமி
சென்னை: திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் கேலிக் கூத்தாக மாறிவிட்டன என்று நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்திருக்கிறார்.
தனி ஒருவன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய 2 வது இன்னிங்க்ஸைத் தொடங்கியிருக்கும் அரவிந்த் சாமிக்கு, திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்தியில் டியர் டாட், தமிழில் போகன் இதுதவிர சின்னத்திரையில் தான் நடத்தும் நிகழ்ச்சி போன்றவற்றில் பிஸியாக அவர் வலம்வரத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் ''தற்போதைய விருது விழா நிகழ்ச்சிகள் வேடிக்கைக்குரிய ஒன்றாக மாறிவிட்டன. விழாவுக்கு அழைக்கும்போதே உங்களுக்கு விருது வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள்.
அவ்வாறு உங்களை அழைத்தால் என்னால் நிகழ்ச்சிக்கு வர முடியாது. அந்த விருதை வேறு யாருக்காவது கொடுத்து விடுங்கள் என்று கூறிவிடுங்கள்.
ஏனெனில் நடிகர்கள் அனைவருமே அவர்களுடைய உழைப்புக்காக விருது பெறத் தகுதியானவர்களே. எனவே நீங்கள் விரும்பும் ஒருவருக்கு அந்த விருதைக் கொடுத்து விடுங்கள்.
விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலைப் போல ஆக்காதீர்கள்'' என்று நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்திருக்கிறார்.
குறிப்பிட்டு அவர் எந்த நிகழ்ச்சியையும் கூறவில்லை என்றாலும், அரவிந்த் சாமியின் இந்தக் கருத்து திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் ஏராளமான விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.