Don't Miss!
- News நாளை மிரட்டும் வெப்ப அலை.. தேர்தல் நாளில் சுகாதார நிலையங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! மக்களே உஷார்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதுமுக ஹீரோயினிடம் பளார், பளார்னு அறை வாங்கினேன்: வைபவ் பேட்டி
சென்னை: கப்பல் படத்திற்காக புதுமுக நடிகையிடம் பளார் பளார் என அறை வாங்கியதாக ஹீரோ வைபவ் தெரிவித்துள்ளார்.
ஷங்கரிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் ஜி. க்ரிஷ் கப்பல் படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்துள்ளார். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சோனம் பஜ்வா நடித்துள்ளார்.
படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் பற்றி வைபவ் கூறுகையில்,
ரசிகர்கள்
கப்பல் படத்தில் என் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் நிலைமையை எடுத்துக்கூறுவதாக உள்ளது. அதனால் இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களின் மனதை கவரும்.
நண்பர்கள்
படத்தில் கருணா, அர்ஜுனன், வெங்கட் மற்றும் கார்த்திக் ஆகியோர் எனது நண்பர்கள். நண்பர்களாக இருந்து கொண்டு என் காதலுக்கு வில்லனாக இருப்பார்கள். அவர்கள் என் காதலை பிரிக்க செய்யும் சதியை இயக்குனர் நகைச்சுவை உணர்வோடு தெரிவித்துள்ளார்.
அறை
படத்தில் ஹீரோயின் என்னை அறையும் காட்சி உள்ளது. என் கன்னம் சிவக்க அவர் பல டேக் வாங்கினார். நானும் வலிக்காத மாதிரியே நடித்தேன். மங்காத்தா படத்தில் கூட நான் தர்ம அடி வாங்கினேன். அதற்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்த படத்திலும் அடி சென்டிமென்ட் ஒர்க்அவுட் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்.
ஷங்கர்
சினிமாவுக்கு வரும் அனைவரையும் போல நானும் ஷங்கரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசை கப்பல் மூலம் நிறைவேறியுள்ளது. இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றார் வைபவ்.