Don't Miss!
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எம்.எஸ். டோணியைத் தொடர்ந்து ரஜினியின் வாழ்க்கையும் படமாகிறது?
கூலியாக, கண்டக்டராக தன் வாழ்க்கையை தொடங்கி எந்த பின்புலமும் இன்றி போராடி இன்று உலகளவில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படுவர் ரஜினிகாந்த்.
இந்திய அரசியல் அதிகாரமே தேடி வந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்ததுக்கு காரணம் அவரது உழைப்பு. அவரது வாழ்க்கை எல்லா காலகட்டங்களிலும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். ஒரு சினிமாவுக்கே உண்டான பரபரப்பும் விறுவிறுப்பும் சுவாரஸ்யமான சம்பவங்களும் நிறைந்திருக்கும்.
அப்படிபட்ட ரஜினியின் வாழ்க்கை வரலாறை அப்பாவிடமே கேட்டு தொகுத்துக்கொண்டிருக்கிறார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. ஸ்டாண்டிங் ஆன் ஆப்பிள் பாக்ஸ் என்ற பெயரில் உருவாகும் அந்த புத்தகத்தில் ரஜினியின் ஆரம்பகால பெங்களூர் வாழ்க்கை, குடும்பம், சினிமா, நண்பர்கள் எதிரிகள் என எல்லாமே தொகுக்கப்படுகிறது. இதை அப்படியே படமாக்கலாம் என்ற ஐடியாவிற்கு இப்போது வந்திருக்கிறார்கள்.
கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.டோணியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து அது இந்தியாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அது போல ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக்கினால் அது உலகம் முழுதுமே வரவேற்பு பெறும். எடுக்கும் படத்தை டாகுமெண்ட்ரியாக மட்டுமே எடுக்காமல் பயோபிக் படமாக எடுக்கலாம் என்று யோசிக்கிறார்கள். அப்படி படமாக்கினால் அதை சௌந்தர்யாவே இயக்க வாய்ப்புள்ளதாம்.