'தலைவர்' ரெடி... விரைவில் ராணா - சௌந்தர்யா தகவல்

ரஜினியின் உடல் நிலை காரணமாக அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்ட படமான ராணா வரும் வராது என அடிக்கடி வதந்திகள் கிளம்பியபடி இருந்தன.
இந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிசம்பரில் படம் தொடங்குவது குறித்து அறிவிப்பு வரும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் இந்தப் படம் தள்ளிப் போவதாக சில இணையதளங்களில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரும், ரஜினியின் இளைய மகளுமான சௌந்தர்யா கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினி இப்போது பக்காவாகத் தயாராகிவிட்டார். எங்கள் வசதிப்படிதான் ஷூட்டிங்கை சீக்கிரம் வைத்துக் கொள்ளுமாறு அவர் கூறி வருகிறார். ஆனால் இயக்குநரும் தயாரிப்பாளரும் அப்பா நன்றாக பழையபடி நிகழ்ச்சிகளுக்கு போகத் தொடங்கிய பிறகே ஷூட்டிங்கைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.
அதன்படி இப்போது தலைவர் பக்காவாகத் தயாராகிவிட்டார். விரைவில் அவரே ஷூட்டிங் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்," என்றார்.
ஆஹா... ரஜினி ரசிகர்களுக்கு பத்தாயிரம் வாலா செய்தியல்லவா இது!


Click it and Unblock the Notifications











