Don't Miss!
- News ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்தின் மகள் கலெக்டர் ஆகிறார்.. 4வது முயற்சியில் பிரம்மாண்ட வெற்றி
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'தலைவர்' ரெடி... விரைவில் ராணா - சௌந்தர்யா தகவல்
ரஜினியின் உடல் நிலை காரணமாக அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்ட படமான ராணா வரும் வராது என அடிக்கடி வதந்திகள் கிளம்பியபடி இருந்தன.
இந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிசம்பரில் படம் தொடங்குவது குறித்து அறிவிப்பு வரும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் இந்தப் படம் தள்ளிப் போவதாக சில இணையதளங்களில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரும், ரஜினியின் இளைய மகளுமான சௌந்தர்யா கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினி இப்போது பக்காவாகத் தயாராகிவிட்டார். எங்கள் வசதிப்படிதான் ஷூட்டிங்கை சீக்கிரம் வைத்துக் கொள்ளுமாறு அவர் கூறி வருகிறார். ஆனால் இயக்குநரும் தயாரிப்பாளரும் அப்பா நன்றாக பழையபடி நிகழ்ச்சிகளுக்கு போகத் தொடங்கிய பிறகே ஷூட்டிங்கைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.
அதன்படி இப்போது தலைவர் பக்காவாகத் தயாராகிவிட்டார். விரைவில் அவரே ஷூட்டிங் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்," என்றார்.
ஆஹா... ரஜினி ரசிகர்களுக்கு பத்தாயிரம் வாலா செய்தியல்லவா இது!