கேரள நடிகைகள்.. ஸ்ரீகாந்த் குஷி கேரள நடிகைகள் அத்தனை பேரும் அட்டகாசமாக நடிக்கிறாங்கோ, நல்லாஒத்துழைக்கிறாங்கோ என்று படா சந்தோஷமாக கூறுகிறார் மெர்க்குரிப் பூக்கள்வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்ரீகாந்த்.கனா கண்டேன் வெற்றிக்குப் பிறகு ஸ்ரீகாந்த் கொடுத்திருக்கும் வெற்றிப் படம்மெர்க்குரிப் பூக்கள். இதில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின்.ஜூட் படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மெர்குரி பூக்கள்.இப்படத்தில் தன்னுடன் நடித்த மீரா ஜாஸ்மின், நெருக்கமான காட்சிகளில் நன்குஒத்துழைத்து நடித்தார் என்று சந்தோஷமாக கூறி பாராட்டித் தள்ளியிருந்தார் ஸ்ரீகாந்த்.(என்ன அடுத்த படத்துலையும் ஜோடி சேர்க்க அடிப் போடுறீங்களா?) இப்போது ஒட்டு மொத்த கேரள நடிகைகளையும் பாராட்டியுள்ளார். கேரளநடிகைகளை சும்மா சொல்லக் கூடாதுங்கண்ணா, ரொம்ப நல்லா நடிக்கிறாங்க.இயல்பா இருக்கிறது அவர்களது நடிப்பு. ஹீரோக்களுடன் நடிக்கும்போது நல்லாஒத்துழைக்கிறாங்க.(கேரளாவுல பொண்ணு பாக்கிறீங்களா?)அவர்களது நடிப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது என்று ஜாலியாக ஆரம்பித்தஸ்ரீகாந்த்தை நிறுத்தி என்னாச்சு? என்றோம்.நான் ஜூட் படத்தில் மீரா ஜாஸ்மினுடன் முதல் முறையாக இணைந்து நடித்தேன்.அதிலேயே அவரோட நடிப்புத் திறமை எனக்குப் புரிந்து விட்டது. இப்போது மெர்க்குரிப் பூக்களில் நடித்தபோது என்னை வெகுவாக கவர்ந்து விட்டார்.ரொம்ப ஜாலியாக, இயல்பாக, சந்தோஷமாக நடித்தார்.எங்கள் இருவரையும் திரையில் பார்க்கும் ரசிகர்கள், நிஜ கணவன், மனைவிபோலவே இருவரும் நடித்திருப்பதாக புகழ்ந்து தள்ளுகிறார்கள், ரொம்ப வெக்காமாப்போச்சு எனக்கு என்று சிரிக்கிறார்.ஸ்ரீகாந்த்தின் அடுத்த படமாக சதுரங்கம் வரவுள்ளது. இதில் பத்திரிக்கையாளராகநடித்திருக்கிறாாரம்.அதைத் தொடர்ந்து உயிர் வரவுள்ளது. உயிர் படத்திலும் கேரளாவைச் சேர்ந்தஷம்ருத்தா நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஸ்டான்லியின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் ஸ்ரீகாந்த்.இதிலும் கேரளாவைச் சேர்ந்த பாவனாதான் அவருக்கு ஜோடி.(அப்டி போடுங்க அறுவாள! மறுபடியும் கேராளதானா...)பாவனா ஏற்கனவே, சித்திரம் பேசுதடி மூலம் ரசிகர்களின் இதயங்களை கொய்துவிட்டவர். இப்படம் கேரளாவிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறதாம். பாவனா தவிரஹீரோவாக நடித்த நரேனும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் இனமான உணர்வுடன்கேரள ரசிகர்கள் படத்தை பார்த்து பேராதரவு தந்து வருகின்றனர்.தமிழகத்தைப் போலவே, கானா உலகநாதனின் வாள மீனு பாட்டு கேரளாவின் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்புதாம்.தெலுங்கு, மும்பை என ஏகப்பட்ட நடிகைகள் வந்தாலும் கேரள நடிகைகள் சூப்பர்டைப்புங்க, அவங்க நடிப்பே நடிப்புதான் என்று மீண்டும் நம்ம ஸ்ரீகாந்த்தொடங்கவே, விட்டோம் ஒரு ஜூட்!

By Staff

கேரள நடிகைகள் அத்தனை பேரும் அட்டகாசமாக நடிக்கிறாங்கோ, நல்லாஒத்துழைக்கிறாங்கோ என்று படா சந்தோஷமாக கூறுகிறார் மெர்க்குரிப் பூக்கள்வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்ரீகாந்த்.

கனா கண்டேன் வெற்றிக்குப் பிறகு ஸ்ரீகாந்த் கொடுத்திருக்கும் வெற்றிப் படம்மெர்க்குரிப் பூக்கள். இதில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின்.

ஜூட் படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மெர்குரி பூக்கள்.இப்படத்தில் தன்னுடன் நடித்த மீரா ஜாஸ்மின், நெருக்கமான காட்சிகளில் நன்குஒத்துழைத்து நடித்தார் என்று சந்தோஷமாக கூறி பாராட்டித் தள்ளியிருந்தார் ஸ்ரீகாந்த்.

(என்ன அடுத்த படத்துலையும் ஜோடி சேர்க்க அடிப் போடுறீங்களா?)


இப்போது ஒட்டு மொத்த கேரள நடிகைகளையும் பாராட்டியுள்ளார். கேரளநடிகைகளை சும்மா சொல்லக் கூடாதுங்கண்ணா, ரொம்ப நல்லா நடிக்கிறாங்க.

இயல்பா இருக்கிறது அவர்களது நடிப்பு. ஹீரோக்களுடன் நடிக்கும்போது நல்லாஒத்துழைக்கிறாங்க.

(கேரளாவுல பொண்ணு பாக்கிறீங்களா?)

அவர்களது நடிப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது என்று ஜாலியாக ஆரம்பித்தஸ்ரீகாந்த்தை நிறுத்தி என்னாச்சு? என்றோம்.

நான் ஜூட் படத்தில் மீரா ஜாஸ்மினுடன் முதல் முறையாக இணைந்து நடித்தேன்.அதிலேயே அவரோட நடிப்புத் திறமை எனக்குப் புரிந்து விட்டது.


இப்போது மெர்க்குரிப் பூக்களில் நடித்தபோது என்னை வெகுவாக கவர்ந்து விட்டார்.ரொம்ப ஜாலியாக, இயல்பாக, சந்தோஷமாக நடித்தார்.

எங்கள் இருவரையும் திரையில் பார்க்கும் ரசிகர்கள், நிஜ கணவன், மனைவிபோலவே இருவரும் நடித்திருப்பதாக புகழ்ந்து தள்ளுகிறார்கள், ரொம்ப வெக்காமாப்போச்சு எனக்கு என்று சிரிக்கிறார்.

ஸ்ரீகாந்த்தின் அடுத்த படமாக சதுரங்கம் வரவுள்ளது. இதில் பத்திரிக்கையாளராகநடித்திருக்கிறாாரம்.

அதைத் தொடர்ந்து உயிர் வரவுள்ளது. உயிர் படத்திலும் கேரளாவைச் சேர்ந்தஷம்ருத்தா நடித்துள்ளார்.


இதைத் தொடர்ந்து ஸ்டான்லியின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் ஸ்ரீகாந்த்.இதிலும் கேரளாவைச் சேர்ந்த பாவனாதான் அவருக்கு ஜோடி.

(அப்டி போடுங்க அறுவாள! மறுபடியும் கேராளதானா...)

பாவனா ஏற்கனவே, சித்திரம் பேசுதடி மூலம் ரசிகர்களின் இதயங்களை கொய்துவிட்டவர்.

இப்படம் கேரளாவிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறதாம். பாவனா தவிரஹீரோவாக நடித்த நரேனும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் இனமான உணர்வுடன்கேரள ரசிகர்கள் படத்தை பார்த்து பேராதரவு தந்து வருகின்றனர்.

தமிழகத்தைப் போலவே, கானா உலகநாதனின் வாள மீனு பாட்டு கேரளாவின் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்புதாம்.

தெலுங்கு, மும்பை என ஏகப்பட்ட நடிகைகள் வந்தாலும் கேரள நடிகைகள் சூப்பர்டைப்புங்க, அவங்க நடிப்பே நடிப்புதான் என்று மீண்டும் நம்ம ஸ்ரீகாந்த்தொடங்கவே, விட்டோம் ஒரு ஜூட்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X