Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஏழை லைட்மேனின் மகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட ஷாருக்கான்
மும்பை: ஏழ்மை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய லைட்மேனின் 5 வயது மகளின் கல்விச் செலவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஏற்றுள்ளார்.
லைட்மேனாக உள்ளவர் முகமது அஜாஸ் ஷேக்(38). கடந்த 12 ஆண்டுகளாக அவர் லைட்மேனாக உள்ளார். அவரது மனைவி ஜரினா. அவர் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதற்கான பரிசு வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை மும்பையில் நடந்தது. விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டு ஜரினாவுக்கு பரிசை வழங்கினார்.
அப்போது ஜரினா தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை தெரிவித்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு மேடைக்கு பின்னால் வந்து தன்னை சந்திக்குமாறு ஷாருக்கான் ஜரினாவிடம் ஆள் அனுப்பி தகவல் தெரிவித்தார்.
அதே போன்று ஜரினா ஷாருக்கானை சந்தித்து தங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையால் தங்களின் 5 வயது மகள் நிஷாவின் பள்ளிப் படிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்த வேண்டியதாகிவிட்டது என்று கூறினார். இதை கேட்ட ஷாருக் சிறுமியை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். அவளின் கல்விச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இது குறித்து முகமது கூறுகையில்,
நான் இந்த ஆண்டின் துவக்கம் வரை பாலாஜி டெலிபிலிம்ஸுக்கு அவ்வப்போது லைட்மேனாக இருந்து வந்தேன். அதன் பிறகு பணக் கஷ்டம் அதிகரித்துவிட்டது. அதனால் பல வேலைகளை செய்ய வேண்டியதாகிவிட்டது. ஏழ்மையின் காரணமாக எனது மகளின் படிப்பை நிறுத்திவிட்டேன். ஆனால் தற்போது ஷாருக்கானால் என் மகள் நிஷா விரைவில் மீண்டும் பள்ளிக்கு செல்லவிருக்கிறாள். ஷாருக்கானுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.