Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பொள்ளாச்சி போன்ற கொடூரத்தை தடுப்பது எப்படி?: வைரலாகும் சிம்பு வீடியோ
சென்னை: பொள்ளாச்சி சம்பவம் தமிழக மக்களை பதற வைத்துள்ள நிலையில் இது போன்ற கொடூரங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிம்பு அறிவுரை கூறிய வீடியோவை அவரின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
பொள்ளாச்சியில் 200 பெண்களை ஏமாற்றி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த 20 பேர் கொண்ட கும்பலில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 16 பேர் எப்பொழுது கைது செய்யப்படுவார்கள் என்பதே அனைவரின் கேள்வி.
இந்நிலையில் சிம்பு ரசிகர்கள் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
'நான் அங்கு இல்லவே இல்லை.. ப்ளீஸ் என்னைக் காயப்படுத்தாதீர்கள்'.. தாக்குதல் குறித்து ஜூலி வேதனை!
|
சிம்பு
உங்கள் பிள்ளைகளிடம் தினமும் 5 நிமிடம் பேசுங்கள். விருப்பம் இல்லாத பெண்ணை தொடுவது உங்க அம்மாவை தொடுவது போன்று என்று அனைத்து தாய்களும் மகன்களிடம் தினமும் சொல்லிப் பாருங்கள். அதன் பிறகு யாரும் தொடவே மாட்டான் என்று சிம்பு பேசிய வீடியோவை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
|
பாராட்டு
சிம்பு பேசியது மிகச் சரி. அம்மாக்களால் தான் பிள்ளைகளின் மனதை மாற்ற முடியும். சிம்பு சொல்வது போன்று சொல்லி சொல்லி வளர்த்தால் பொள்ளாச்சி கொடூரம் போன்று இனி நடக்காது என்று நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கொடூரத்தை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மக்களும், திரையுலக பிரபலங்களும் பரிந்துரை செய்து வரும் நிலையில் சம்பவம் நடப்பதை தடுக்க அறிவுரை வழங்கியுள்ளார் சிம்பு. அவரின் இந்த குணம் பிடித்துள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.
ஜாமீன்
பொள்ளாச்சி வழக்கில் கைதாகியுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவுக்கு அவரின் அம்மா லதா ஜாமீன் கோரினார். மேலும் நீதிமன்றத்திற்கு வந்த அவர் என் பையன் நல்லவன், அந்த பொண்ணுங்கள கூப்பிட்டு விசாரிங்க என்று கோஷமிட்டார். லதாவின் செயலை பார்த்தவர்கள் அம்மாவே இப்படியா என்று முகம் சுளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.