Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஃபோன் போட்ட ரஜினி: படத்தை தள்ளிப் போட்ட கன்னட நடிகர் சுதீப்
பெங்களூர்: கே.எஸ். ரவிக்குமார் என் படத்தை முதலில் இயக்கட்டுமே என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து கூறியதால் தனது பட வேலையை தள்ளிப் போட்டதாக கன்னட நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக உள்ளவர் நான் ஈ படத்தில் நடித்த சுதீப். அவர் இயக்கிய மானக்யா படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. இதையடுத்து அவரை கே. எஸ். ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது.
இந்நிலையில் அந்த படம் தள்ளிப் போயுள்ளது.
ரவிக்குமார்
கே.எஸ். ரவிக்குமாருடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் அந்த பட வேலை தற்போது தள்ளிப் போடப்பட்டுள்ளது. அவர் ரஜினி சார் படத்தில் வேலை செய்து வருகிறார் என்றார் சுதீப்.
ரஜினி
ரஜினி சார் எனக்கு போன் செய்து உங்கள் படத்திற்கு முன்பு ரவிக்குமார் என் படத்தை இயக்கட்டுமா என்று கேட்டார் என்று சுதீப் தெரிவித்தார்.
சம்மதம்
அவ்வளவு பெரிய மனிதர் எனக்கு போன் செய்து கேட்கும் போது மறுக்க மனமில்லை. அதனால் சந்தோஷமாக சரி என்று அவரிடம் தெரிவித்தேன் என்றார் சுதீப்.
விஜய்
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் சுதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.