சிம்புவின் 50ஆவது படம்.. தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்கப்போகிறாரா?.. செமயா இருக்குமே
சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படும் சூழலில்; தற்போது அவரது 50ஆவது படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
எஸ்டிஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.
எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
படம் ட்ராப்?: படத்தின் அறிவிப்பு வெளியானதோடு அதற்கு பிறகு எந்தவிதமான மூவ்மெண்ட்டும் தெரியவில்லை. இதன் காரணமாக ஒருவேளை படத்தை ட்ராப் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கும் படக்குழு எந்த பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்துவந்தது. அதனையும் கவனித்த ரசிகர்கள், அவ்ளோதான் எஸ்டிஆர் 48 முடிந்துவிட்டதுபோல என்று உறுதியாகவே சமூகவலைதளங்களில் ஓபனாக பேச ஆரம்பித்தனர். ஆனால் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. அடுத்ததாக தக் லைஃப் படத்திலும் அவர் நடிப்பதற்கு கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு 50: இந்தப் படத்தை முடித்துவிட்டு ஓ மை கடவுளே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அஸ்வத் இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு சிம்பு படத்தை தொடங்கலாம். இந்நிலையில் சிம்புவின் 50ஆவது படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சுதா கொங்கரா: அதன்படி அந்தப் படத்தை சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சுதா சொன்ன கதை சிம்புவுக்கு டபுள் ஓகே ஆகியிருப்பதால் உடனடியாக ஒத்துக்கொண்டுவிட்டாராம் சிம்பு. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சுதா இயக்கினால் எஸ்டிஆர் 50 பட்டாசாக இருக்கும் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்துக்காக தேசிய விருது வென்றார். இப்போது அவர் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











