twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ரஜினிகாந்த்

    By Mayura Akilan
    |

    சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

    நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். அவர்கள் 2 பேரும் இரவு சுமார் 7.45 மணியளவில் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்றனர்.

    இரவு சுமார் 8.35 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமிபடம் ஆகியவை வழங்கப்பட்டது.

    English summary
    Superstar Rajinikanth paid a thanks giving visit to Tirupati to seek the divine blessings of Lord Venkateswara.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X