Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மலையாளத்தில் ஸ்ட்ராங் ஆகும் சூர்யா.. நட்சத்திரக் கலைவிழாவில் செம வரவேற்பு!
Recommended Video
திருவனந்தபுரம் : மலையாள திரையுலகம் சார்பில் 'அம்மா மழவில்லு' நட்சத்திர கலைவிழா மே 6-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த நட்சத்திர கலைவிழாவில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற மூத்த நடிகர்கள் முதல் துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் என இளம் நடிகர்கள் வரை பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், அஜூ வர்கீஸ், நமீதா ப்ரமோத் ஆகியோர் இந்த விழாவில் நடனமாடி கலக்கியிருக்கின்றனர். AMMA (Association of Malayalam Movie Artists) நடத்திய இந்த கலைவிழா பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டுள்ளார். கேரளாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் சூர்யா ஏற்கெனவே கொச்சின், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தனது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
நடிகர் விஜய்க்கு பிறகு அதிகமான இளம் ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் சூர்யா. ஆகவே, மலையாள ரசிகர்களைக் கவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சூர்யா. நட்சத்திரக் கலைவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியிருக்கிறார் சூர்யா.
மம்மூக்காவின் திருமண நாள் இன்று என மேடையில் அறிவித்து பார்வையாளர்களின் ஆரவாரத்தை பரிசாகப் பெற்றார். மேலும், மலையாள நடிகர் சங்கத்திற்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக கொடுத்து மலையாள ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளார்.
சூர்யாவிற்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சூர்யாவை வரவேற்கும்போதும் சூர்யாவின் பேச்சின்போதும், ஆரவாரம் செய்துள்ளனர் பார்வையாளர்கள். மலையாள திரையுலகில் நல்ல ஆதரவைச் சம்பாதித்திருக்கிறார் சூர்யா.