Don't Miss!
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- News நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்.. ஓட்டுப்போட வந்தது குத்தமா? போலீசுக்கு பறந்த பரபர புகார்.. அடபாவமே
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
முதல்ல சம்பளத்தக் குடுத்துட்டு அப்புறம் பேசலாமே: தயாரிப்பாளர் மீது சூர்யா குழு பாய்ச்சல்
Recommended Video
சென்னை: தயாரிப்பாளர் சசிகாந்த் மீது சூர்யாவின் குழு கோபத்தில் உள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றி பெற்றதை பாராட்டும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா காரை பரிசளித்தார் சூர்யா. ஆனால் படம் தோல்வி அடைந்ததை மறைக்கவே சூர்யா இப்படி பரிசளித்ததாக விநியோகஸ்தர்கள் கோபம் அடைந்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சசிகாந்தும் சூர்யா கார் பரிசளித்தது பற்றி பேசியுள்ளார்.
வெற்றி
ஒரு படம் வெற்றி பெற்றால் வீட்டில் அமைதியாக அதை கொண்டாட வேண்டும். ஒரு படத்தை எடுக்க 2, 3 ஆண்டுகள் போராடி அது வெற்றி பெற்றால் கொண்டாட வேண்டியது தான். ஆனால் அதை விளம்பரப்படுத்துவது தவறு என்கிறார் சசிகாந்த்.
கார்
ஒரு முன்னணி நடிகர் தன்னை வைத்து படம் எடுத்த இயக்குனருக்கு கார் பரிசளித்துள்ளார். இது வழக்கமாகிவிடுமே. நான் 12 படங்கள் தயாரித்துள்ளேன். ஒவ்வொரு படமும் ஒரு வகையில் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார் சசிகாந்த்.
அழுத்தம்
படங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற பிரஷர் உள்ளது என்று தயாரிப்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார். சசிகாந்தின் பேச்சு சூர்யாவின் குழுவினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
|
விமர்சனம்
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்டின் இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தன் பட நடிகர், இயக்குனருக்கு சம்பளத்தை ஒழுங்காக கொடுக்காத தயாரிப்பாளர் பரிசுகளை பற்றி பேசுகிறார். முதல்ல சம்பளத்தக் குடுத்துட்டு அப்புறம் பேசலாமே!! என தெரிவித்துள்ளார்.