பாலிவுட்டில் நுழைந்துவிட்டேன்.. விரைவில் அதுவும் நடக்கும்.. சூர்யா ஓபன் டாக்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது இந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகி சிவாவுக்கு பெரும் திருப்புமுனையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் பாலிவுட் குறித்து சூர்யா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படத்துக்கான பட்ஜெட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து சம்பவம் செய்வாரா இல்லை சரித்திரம் படைப்பாரா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஏனெனில் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மொத்தம் 30 மொழிகளில் படமானது ரிலீஸாகவிருக்கிறது.

suriya kanguva

என்ன கதை: கங்குவா படம் முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும்தான் பீரியட் படமாக கங்குவா உருவாகிறது. மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும்படிதான் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சிவா. அதேபோல் அந்த பீரியட் பகுதிதான் 3டியில் படமாக்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. முக்கியமாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் அதற்கு பதிலடி கொடுக்க சிவா மும்முரமாக உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

இரண்டு பாகங்கள்: மேலும் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கை சிவா முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக முதல் பாகம் மெகா ஹிட்டாகும்; எனவே இரண்டாம் பாகத்தையும் அதற்கு பிறகு வெளியிட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லருக்கு கிடைத்த விமர்சனம்: படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களை கொடுத்தனர். மேலும் ட்ரெய்லரில் பாகுபலி வாடை ஹெவியாக அடிப்பதாகவும்; இதிலும் சிவா சொதப்பிவிடுவாரோ என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறினர். ஆனால் ட்ரெய்லர் பட்டையை கிளப்புகிறது என்றும் படம் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்றும் சூர்யாவின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். படமானது இந்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் பதில்: படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருப்பதால் கங்குவா ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் மும்பையில் நடந்த ப்ரோமோஷனில் கலந்துகொண்ட சூர்யா பேசுகையில், "ஒரு வருடத்துக்கு முன்பாகவே பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகிவிட்டேன். ஆனால் அந்தத் திரைப்படத்தின் வேலைகள் மெல்லமாக நடக்கின்றன. கண்டிப்பாக அந்தத் திரைப்படம் விரைவில் உருவாகும்" என்றார். முன்னதாக சூர்யா கர்ணா என்ற ஹிந்தி படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் கமிட்டாகியிருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X