Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்.ஜி.கே. ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?: சூர்யா உருக்கமான விளக்கம்
சென்னை: என்.ஜி.கே. பட ரிலீஸ் தள்ளிப் போனது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சூர்யா.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று முதலில் அறிவித்தனர். பின்னர் பட வேலைகள் முடியாததால் தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் பட ரிலீஸ் தள்ளிப் போனது குறித்து சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது,
செல்வராகவன்
இன்னொரு சாதாரண படமாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் என்.ஜி.கே. படத்தை தேர்வு செய்தேன். செல்வராகவனுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். என் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை நான் முழுமையாக நம்புகிறேன். இந்த படத்தில் நல்ல விஷயம் வைத்திருக்கிறோம்.
தீபாவளி
படப்பிடிப்பு நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் எங்களையும் மீறி சில விஷயங்கள் நடக்கும்போது நான் என் குழுவினருடன் இருக்க வேண்டும். என்.ஜி.கே. படம் தீபாவளி அன்று ரிலீஸாகும் என்று இதே மேடையில் தான் நான் சொன்னேன். ஆனால் தற்போது சொல்கிறேன் படம் தீபாவளிக்கு ரிலீஸாகவில்லை.
பொங்கல்
எனக்கு பாலா அண்ணா சொல்லியது நான் நினைவுக்கு வருகிறது. தீபாவளிக்கும், பொங்கலுக்கும் வருவதற்கு அது பட்டாசும், பொங்கலும் கிடையாது. அது படம். அது எப்பொழுது வருமோ அப்பொழுது தான் வரும் என்றார் அவர். சில விஷயங்கள் நம்மையும் மீறி நடக்கும்போது பாசிட்டிவாக இருக்க வேண்டும். நம்பிக்கையில் தான் போய்க் கொண்டிருக்கிறது.
கவலை
இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க. படத்தை தீபாவளிக்கு வெளியிட முடியவில்லை என்பதற்காக வருத்தப்படுகிறேன். உங்களை போன்றே எங்களுக்கும் வருத்தம் உள்ளது. உங்களின் நிலைமையும் புரிகிறது என்றார் சூர்யா. என்.ஜி.கே. படம் தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பை பார்த்து சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் தான் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!