Don't Miss!
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விக்னேஷ் சிவனை அடுத்து ராஜுமுருகன் படத்தில் சூர்யா: அப்போ முத்தையா..?
சென்னை: விக்னேஷ் சிவன் படத்தை அடுத்து சூர்யா ஜோக்கர் இயக்குனர் ராஜுமுருகன் படத்தில் நடிக்க உள்ளாராம்.
ஹரியின் எஸ்3 படத்தை முடித்த பிறகு சூர்யா பா. ரஞ்சித் படத்தில் நடிப்பார், முத்தையா படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு சூர்யா முத்தையாவின் படத்தில் நடிக்க உள்ளதாகவும், அவருக்கு அப்பாவாக ராஜ்கிரண் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின.
படம் அண்ணன், தங்கை இடையேயான பாசம் பற்றியது என்று கூட கூறப்பட்டது.
விக்னேஷ் சிவன்
முத்தையா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எஸ்3 படத்திற்கு பிறகு நடிக்க நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
முத்தையா
முத்தையா படத்தில் நடிக்க முடிவு செய்த சூர்யாவிடம் பேசி விக்னேஷ் படத்தில் நடிக்க வைத்தது நயன்தாரா என்று கூறப்படுகிறது. சரி விக்கி படத்தை முடித்த பிறகு சூர்யா முத்தையாவுக்கு கால்ஷீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ராஜுமுருகன்
சூர்யா விக்கி படத்தை அடுத்து ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகன் படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. சூர்யா, ராஜுமுருகன் சேரும் படத்தை ஜோக்கரை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்குமாம்.
சூர்யா
சூர்யா அடுத்த ஆண்டு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளாராம். படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார். இந்த பட வேலைகளை முன்பே துவங்கியிருக்க வேண்டியது. ஆனால் சூர்யா ரொம்ப பிசியாக இருப்பதால் ஓராண்டு தள்ளிப் போனது.