Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ .. ஹீரோ ..
கல்லூரி கால நண்பர்களான விஜய்யும், சூர்யாவும் ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது 3வது முறையாக இருவரும் சேர்ந்துநடிக்கவுள்ளனர்.
சூர்யாவின் அறிமுகப்படமான நேருக்கு நேர் படத்தில் விஜய் அவருடன் சேர்ந்து நடித்தார். படம் மற்றொரு அக்னி நட்சத்திரமாக இல்லாவிட்டாலும் கூடவிஜய், சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சேர்ந்து பிரண்ட்ஸ் படத்தில் இணைந்தனர். இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றி இருவருக்கும் சரியானமார்க்கெட்டைக் கொடுத்தது.
இந்த இரு படங்களிலும் விஜய்யுடன் நடித்தபோது, சூர்யா ஒரு சாதாரண நடிகராக, ஆடக் கூட தெரியாமல், நோஞ்சானாக, பிலிம்ரோல்களை சிரித்தே நிரப்பிக்கொண்டிருந்தார்.
பாலாவின் இயக்கத்தில் நந்தா வெளியான பிறகே ஸ்டார் நடிகரானார். பாடி பில்டும் செய்து கொண்டு இப்போது இளைய கன்னிகளின் தூக்கம் கலைக்கும்முன்னணி நடிகராகிவிட்டார்.
வளர்ந்துவிட்டாலும் விஜய்யுடனான நட்பை கெட்டியாக வைத்திருக்கிறார். விஜய்யும் சூர்யா என்றால் ஓடி வந்துவிடுகிறார்.
இந் நிலையில் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். ஆனந்தி பிலிம்ஸ் நிறுவனம் இப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. படத்தின் பெயர், இயக்குனர்உள்பட எதுவும் இன்னும் முடிவாகவில்லை.
இருவரையும் சந்தித்துப் பேசி இணைந்து நடிக்க ஒப்புதல் மட்டுமே வாங்கியுள்ளார்களாம்.
விஜய்க்கு ஏற்ற ஆக்ஷன் தீனியும், சூர்யாவுக்கு ஏற்ற நடிப்புத் தீனியும் கொடுக்கப்படும் என்கிறது ஆனந்தி பிலிம்ஸ் வட்டாரம்.
சூர்யா நியூஸ் போட்டுவிட்டு ஜோதிகாவை விட்டுவிட்டால் அந்தப் பாவம் நம்மை சும்மா விடுமா?..
ஸோ.. இதோ ஜோதிகா குறித்து ஒரு பொடிமாஸ்..
பென்ஸ் கார் வைத்துள்ள நடிகைகளில் ஜோவும் ஒருவர் என்பது உங்களுக்குத் தெரியும் தான். இந்தக் கார் மீது ஜோவுக்கு ரொம்ப பிரியம். சமீபத்தில்சந்திரமுகி சூட்டிங்கை முடித்துவிட்டுக் கிளம்பும்போது மரக் கட்டைகளில் கார் மோதி ஆங்காங்கே நெளிந்துவிட்டதாம்.
சிராய்ப்பு காருக்குத்தான் என்றாலும் ஜோதிகா ரொம்பவே பதறிவிட்டாராம். டிரைவருக்கு கன்னாபின்னாவென டோஸ் விட்டாராம்.
கொஞ்ச நேரத்திலேயே சகஜமாகி டிரைவரிடமே ஸாரி கேட்டாராம். தாட்ஸ் ஜோதிகா!