Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஜோ தான் பொண்ணு.. சூர்யா சொல்லிட்டார்
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காதல் மறுபடியும் வருமா என்று கேட்கும் அளவுக்குபடு கமுக்கமாக அதேசமயம் படா உறுதியாக காதலித்து வருபவர்கள் ஜோதிகா,சூர்யா.
சூர்யாவிடம் நேரடியாகக் கேள்வி கேட்டால் சிரிப்பார். சரி ஜில்லென்று காதல் எப்படி இருக்கிறது என்று நம்மைரொம்ப விவரமான ஆளாக நினைத்துக் கொண்டு கேட்டால்,
முதலில் ரொம்பவே மூடி மறைக்க முயன்ற சூர்யாவும், ஜோதிகாவும், பின்னர் ரொம்பநாளைக்கு அது சாத்தியமில் என்பதால் அவ்வப்போது வெளிப்படையாகவேவிழாக்களில் ஜோடியாக கலந்து கொள்ள ஆரம்பித்தனர்.
சிவக்குமார் குடும்பத்தில் அவரைத் தவிர குடும்பத்தினர் அத்தனை பேரும் ஜோவுக்குஓ.கே. சொல்லி விட்டனர். அப்பாதான் எதிர்ப்பாக இருந்து வந்தாராம்.
இப்போது அவரும் ஒரு வழியாக இறங்கி வந்து விட்டார். அக்டோபரில்சூர்யாவுக்குக் கல்யாணம் என்று சமீபத்தில் அறிவித்தார். ஆனால் பொண்ணுயாரென்று அவர் சொல்லவில்லை. இதனால் மறுபடியும் சஸ்பென்ஸ் எகிறியது.
ஜோதிகாதான் சூர்யாவை மணக்கப் போகிறவர் என்று அவருடைய அக்கா நக்மாகூறினாலும்,
ஜோதிகாவும் புதுப் படங்களில் நடிக்காமல் கழன்று கொள்ள ஆரம்பித்ததாலும் 2 தெலுங்குப் படங்களுக்குவாங்கிய காசை திருப்பித் தந்ததாலும் பொண்ணு இவர் தானோ என்று கிட்டத்தட்ட உறுதியான நிலைக்குகோலிவுட் சகலபாடிகள் வந்தனர்.
ஆனாலும் சம்பந்தப்பட்டவர்களின் வாயிலிருந்து எதுவும் வராததால், சஸ்பென்ஸ்கூடியதே தவிர குறையவில்லை.
இந்த சஸ்பென்ஸை இப்போது சூர்யா உடைத்துள்ளார். நான் கல்யாணம் செய்துகொள்ளப் போவது ஜோதிகாவைத்தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் சூர்யா.
இருந்தாலும் அப்பாதான் முறையாக அறிவிக்க வேண்டும். அதற்காகத்தான்காத்திருந்தோம். ஜோதிகாவுடன் நிச்சயம் திருமணம் நடைபெறும். தேதியை அப்பாஅறிவிப்பார் என்று கூறியுள்ளார் சூர்யா.
அப்பாடா, பிரச்சினை ஓஞ்சுச்சுப்பா, இனிமே நம்ம வேற வேலையைப் பார்க்கப்போகலாம்!